பக்கம் எண் :

204பாரதம்உத்தியோக பருவம்

லும்முதலியன.  வெண்மை - இனம் விலக்குதற்கு வந்ததல்லாத
இயற்கையடைமொழி.  வெண்ணிறமுடைமைபற்றி, வெள்ளியென்று பெயர்.
அளித்து உவந்த என்றும் பிரித்து உரைக்கலாம்.  விசையன் - இடைப்போலி;
கொல் - அசை.                                          (198)

139.-கர்ணன் வீடுமனைநோக்கிநிஷ்டூரமாகச் சில கூறுதல்.

அவன்மொழிந்தமொழிதன்செவிப்படலு மருகிருந்தமுதருந்துநீ,
யிவனுடன்சிலர்பகைக்கின் மற்றவர்தமிசையுமாண்மையுமியம்புவாய்,
புவனமொன்றுபடவரினுமென்றனொடு  பொருவராயி  னெதிர்பொர 
                                            விடாய்,
சிவனுமென்கணையையஞ்சுமென்று நனிசீறினானிரவிசிறுவனே.

     (இ -ள்.) அவன் மொழிந்த மொழி - (இங்ஙனம்) அவ்வீடுமன்
சொன்னவார்த்தை, தன் செவி படலும் - தனதுகாதில் நுழைந்த வளவிலே
[அதனைக்கேட்டமாத்திரத்தில் என்றபடி],- இரவி சிறுவன் - சூரிய
புத்திரனான கர்ணன்,-(அவ்வீடுமனை நோக்கி), 'அருகு இருந்து அமுது
அருந்தும்நீ - (எப்பொழுதும்இத்துரியோதனனது) சமீபத்திலே யிருந்து
(அவனது) அன்னத்தையுண்ணுகிற நீ,(எப்போதும்), இவனுடன் சிலர்
பகைக்கில் - இத்துரியோதனனுடன் வேறுயாரேனும் சிலர்
பகைமைகொண்டால், (அப்பொழுது), மற்று அவர் தம்இசையும் ஆண்மையும்
இயம்புவாய் - எதிரிகளான அவர்களது கீர்த்தியையும்பராக்கிரமத்தையுமே
எடுத்துக்கூறும் இயல்புடையாய்; புவனம் ஒன்றுபடவரினும்-
எல்லாவுலகத்தாரும் ஒருமிக்கத் திரண்டு வந்தாலும், என்தனொடு பொருவர்
ஆயின் - என்னுடனே போர் செய்யவல்லவரானால், எதிர் பொர விடாய் -
எதிர்த்துப் போர் செய்ய விடுவாய்; சிவனும் என்கணையை அஞ்சும் -
சிவபிரானும் எனது அம்புக்கு அஞ்சுவான்,' என்று - என்று சொல்லி, நனி
சீறினான் - மிகுதியாகக் கோபித்தான்; (எ - று.)

     சிவன்என்ற சொல்லுக்கு - (யாவர்க்கும்) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்;  சிவன - சுபம்.  உம் - உயர்வுசிறப்பு; அது -
அப்பிரானதுவெகுண்டு உலகமழிக்கும் ஆற்றலையும், முன் அருச்சுனன் வில்
நாணற்றுத்திகைக்கும்படி எதிர்த்துப் போர்செய்த திறமையையும் குறிக்கும்.
இவன்இங்ஙனங் கூறினது பேதைமை யென்பார், 'சிறுவன்' என்றார். சிவனும்
என்கணையை அஞ்சும் - "அச்சக் கிளவிக்கு ஐந்து மிரண்டும், எச்சமிலவே
பொருள் வயினான' என்பதனால், இரண்டாம் வேற்றுமை விரியாகக்கூறினான்.                                               (199)

140.- யாவரும் தம்தம்இருப்பிடங்கட்குச் செல்லுதல்.

இரவிமைந்தனொடுகங்கைமைந்தனெதிர் வாய்மையொன்றையு
                                     மிசைத்திலன், 
பொரவறிந்திடுதுமன்றுவெஞ்சமரிலென்றெழுந்து தனி
                                     போயினான்,
அரவவெங்கொடியுயர்த்தகோவுமிகலரசருக்கு விடைநல்கினான்,
விரவுபைந்துளபமாலையான்விதுரன்மனையிலுற்றது விளம்புவாம்.