153. | கதிரவனருளினாலோர்கணத்திடைக்காதல்கூர மதலையங்கொருவன்றன்னைப்பயந்தபின்வடுவென்றஞ்சி மிதவையம்பேழைதன்னிற்பொதிந்துநீவிடவப்போதந் நதியுமம்மகவைக்கங்கைநதியிடைப்படுத்ததன்றே. |
(இ -ள்.) கதிரவன் - ஆயிரங்கிரணங்களையுடைய சூரியன், அருளினால்- கருணையினால், ஓர் கணத்திடை - ஒருகணப்பொழுதிலே, காதல்கூர -இன்பமடைய, (அதனால்), அங்கு - அப்பொழுது [அவ்விடத்தில்] மதலைஒருவன் தன்னை - ஒருபுத்திரனை, பயந்தபின் - (நீ) பெற்றபின்பு, வடு என்றுஅஞ்சி - (இது உனக்கும் உன்மரபுக்கும்) பழிப்பாமென்று பயந்து, நீ -, மிதவைஅம் பேழைதன்னில் பொதிந்து - நீரில் மிதக்குந் தன்மையதாகிய ஒருமரப்பெட்டியிலே (அக்குழந்தையை) அடக்கஞ்செய்து, விட - (அப்பெட்டியையமுனாநதியிலே) செலுத்திவிட, அப்போது-, அ நதியும் - அவ்யமுனையாறும்,அ மகவை கங்கை நதியிடை படுத்தது - அக்குழந்தையை (ப் பெட்டியுடனே)கங்காநதியிற் கொண்டுபோய்ச் சேர்த்தது; (எ - று.) - அன்றே - தேற்றம்;ஈற்றசையுமாம்.
தேவர்களது அநுக்கிரகத்தா லுளதாங்கருப்பம் காலதாமதமின்றி உடனே பிறந்திடு மென்பது மரபு. பேழைதன்னில் அம்மகவை அப்போது பொதிந்து கங்கைநதியிடை விட (அப்பேழையை) அன்றே [அன்றைய தினமே] அந்நதியும் படுத்தது [கொண்டுவந்தது] என்று அந்வயித்தும் உரைக்கலாம். மிதவை, ஐ - கருத்தாப் பொருள்விகுதி. பேழை - பேடிகா என்னும் வடமொழியின் சிதைவென்பர். (213) 154. | காதனின்புதல்வன்றன்னைக்கண்ணிலாவரசன்பொற்றேர்ச் சூதன்வந்தெடுத்துக்கொண்டுசுதனென வளர்த்தகாலை ஆதபனிவனையாருங்கன்னனென்றழைக்கவென்றான் தாதையும்விசும்பிற்சொன்னநாமமேதக்கதென்றான். |
(இ -ள்.) காதல் நின் புதல்வன் தன்னை - அன்புக்கு உரிய உனது புத்திரனை, கண் இலா அரசன் பொன் தேர் சூதன் - திருதராட்டிர ராசனது பொன்மயமான இரதத்தைச் செலுத்தும் பாகனான அதிரதனென்பவன், வந்து எடுத்துக்கொண்டு - அக்கங்கையாற்றுக்கு வந்து எடுத்துக்கொண்டு சென்று, சுதன் என வளர்த்த காலை - தன்புத்திரனாகப்பாவித்து வளர்த்த காலத்தில், ஆதபன் - சூரியன் - இவனை யாரும் கன்னன் என்று அழைக்க - 'இப்புதல்வனை எல்லோரும் கர்ணனென்று அழைப்பாராக,' என்றான் - என்று(அசரீரி வாணியாகச்) சொன்னான்; தந்தையும் - (வளர்க்கிற) தந்தையானஅதிரதனும், விசும்பின் சொன்ன நாமமே தக்கது என்றான் - ஆகாயத்திற்சொல்லப்பட்ட பெயரே தகுதியுடையது என்று கூறினான்; (எ - று.)
இப்புத்திரன் பிறந்தபொழுதே கர்ணகுண்டலங்களோடு கூடியிருந்தமைபற்றி கர்ணனென்ற பெயர் இவனுக்குத் தகும். குழந் |