| நீதியினிருந்துதாழநிலவறைசமைத்தபின்னர் ஆதிநூறாயிரம்போரரக்கரையதனுள்வைத்தான். |
(இ -ள்.) மாதுலன் - மாமனான சகுனி, உரைத்த - சொன்ன, மாற்றம் -வார்த்தையை, மருகனும் - மருமகனான துரியோதனனும், இசைந்து -உடன்பட்டு [அங்கீகரித்து], கங்குல் போது இடை - அந்த நடுராத்திரிப்பொழுதில்தானே, அனேக மல்லர் வருக என புகன்று - பல மற்போர்வீரர்கள் வருவாராக வென்று கூறி, (வரவழைத்து), தானும்-, நீதியின் இருந்து - (அவ்வாலோசனைக்குரிய) முறைமையிலே இருந்துகொண்டு, நில அறை தாழ சமைத்த பின்னர் - நிலவறையை ஆழமாக உண்டாக்கினபின்பு, ஆதிநூறு ஆயிரம் போர் அரக்கரை - பழமையான போரில்வல்ல இராக்கதர்கள் லட்சம் பேரை, அதனுள் வைத்தான் - அந்நிலவறையினுள்ளே இருத்தினான்; (எ - று.) மாதாவினுடன்பிறந்தவன், மாதுலன். நிலவறை - பூமிக்குள் வெட்டப்படும் பள்ளம். 'நூறாயிரம் பேரரக்கர்' என்றும் பாடம். நீதியின் தாழஇருந்து - நியாயத்தினின்று கீழ்ப்பட இருந்து [வழுவி] என்றும் உரைக்கலாம். (240) 181. | மல்லர்பப்பரவர்தம்மைமற்றதினிரட்டிவைத்தான் வில்லுடைவீரர்தம்மைவேறதினிரட்டிவைத்தான் பல்படைவல்லோர்தம்மைப்பதின்மடங்கதனில்வைத்தான் அல்லிலோர்கடிகைதன்னிலறிவனையழைக்கவென்றே. |
(இ -ள்.) அறிவனை அழைக்க என்று - நுண்ணறிவுடைய கண்ணனை (மறுநாள்) அழைக்கவேண்டுமென்று கூறி, (அங்ஙனம் வருகையிற் பிடித்திடுதற்கு), அல்லில் ஓர் கடிகைதன்னில் - அவ்விராத்திரியில் ஒரு நாழிகைப்பொழுதினுள்ளே, மல்லர் பப்பரவர் தம்மை - மல்லர்களையும் பப்பரர்களையும், அதின் இரட்டி வைத்தான் - அவ்விராக்கதர்தொகையினும் இரண்டு மடங்காக [இரண்டுலட்சம் பேரை] (அந்நிலவறையினுள்) இருக்கச்செய்தான்; வில் உடை வீரர் தம்மை - வில்லையேந்திய வீரர்களை, வேறு - தனியே, அதின் இரட்டி வைத்தான் - அத்தொகையினும் இரண்டுமடங்காக [நாலுலட்சம் பேரை] வைத்திட்டான்; பல் படை வல்லோர்தம்மை - பல ஆயுதங்களிலும் வல்ல சூரர்களை, அதனில் பதின்மடங்கு வைத்தான் - அத்தொகையினும் பத்துமடங்காக [நாற்பது லட்சம்பேரை] அங்கு இருத்தினான்; (எ - று.) பப்பரவர் - பப்பரநாட்டிலுள்ளவர்; இவர் - மிலேச்சசாதிவகை யினுட்பட்டவர். மல்லர்பப்பரவர்தம்மை - மற்போர் வல்லவராகிய பப்பரவரையென்றுமாம். இரட்டுதலையுடையது - இரட்டி: இரட்டுதல் - இரண்டாதல்; இ- கருத்தாப்பொருள்விகுதி. கடிகை - கடிகா என்னும் வடமொழியின் திரிபு;அது, இருபத்துநான்கு நிமிஷம் கொண்ட நேரம். 'அழிக்க' என்றும் பாடம்.மற்று - அசை; பின்பு என்றுமாம். (241) |