இதுவும், மேற்கவியும் - குளகம். (இ -ள்.) (துரியோதனன் சுட்டிக்காட்டியவண்ணம்), இறைவன் - கண்ணபிரான், எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே - அழகையும் ஒளியையுமுடைய இரத்தினங்களைப் பதிக்கப்பெற்ற அவ்வாசனத்தில் வீற்றிருந்தவளவில், நெறுநெறென - (அந்நிலவறையைமூடிய மூங்கிற் பிளப்புக்கள்) நெறுநெறு என்று ஒலிபடமுறிய, நிலவறையில் கொடு புக- (அவ்வாசனம் உள்ளிறங்கித் தன்னை) நிலவறையிற் கொண்டுசெல்ல,- நெடியவன் - பெருமையுடைய கண்ணன்,- அப்பொழுதே-, மறலி என தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா - (கொடுமையில்) யமனென்று சொல்லத்தக்க துரியோதனராசன் செய்த வஞ்சனையைத் திருவுள்ளத்திலறிந்து, முறுகு சினத்துடன் - மூண்டெழுந்த கோபத்துடனே, அடி அதலத்து உற - (தனது) திருவடி பாதாளத்தில் செல்லவும், முடி ககனத்து உற - (தனது) திருமுடி வானத்திற் செல்லவும், (எ - று.)- 'நிமிர்ந்தனன்' என அடுத்த கவியோடு தொடரும். நெறுநெறென - ஒலிக்குறிப்பு; சப்தாநுகரணம். துரியோதனனது வஞ்சனையினின்று மாயவன் தப்புதற்கு அவன் சூழ்ச்சியை முன்னமே அறிய வேண்டுவதில்லை யென்பார், 'அப்பொழுதே உணரா' என்றார். மறல் - கொடுமை: அதனை யுடையவன் மறலி; இ - பெயர்விகுதி: இனி, இப்பெயர்க்கு - மறுக்கப்படாதவனென்றும் பொருளுரைக்கப்படும். கொடு நிலவறையில் என எடுத்து, கொடுமையான நிலவறையிலே யென்றும் உரைக்கலாம். 'நெடியவன்' என்றது - திரிவிக்கிரமாவதார கதையைச் சுட்டும்; மேல், 'அடியதலத்துற முடிககனத்துற' என்பதற்கு ஏற்ப வென்க. இதுமுதல் முப்பதுகவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று விளங்காய்ச்சீரும், மற்றையைந்தும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (251) 192. | அஞ்சினமஞ்சினமென்றுவிரைந்துயரண்டர்பணிந்திடவுந் துஞ்சினமின்றெனவன்பணியின்கிளைதுன்பமுழந்திடவும் வஞ்சமனங்கொடுவஞ்சகனின்றிடுவஞ்சனைநன்றிதெனா நெஞ்சில்வெகுண்டுலகொன்றுபடும்படிநின்றுநிமிர்ந்தனனே. |
(இ -ள்.) (கண்ணன்), வஞ்சகன் வஞ்சம் மனம் கொடு இன்று இடு வஞ்சனை இது நன்றுஎனா - ('பாண்டவரை இராச்சியம்) வஞ்சித்தவனாகிய துரியோதனன் வஞ்சனையான எண்ணத்தைக்கொண்டு இப்பொழுது செய்த வஞ்சிப்பு நன்றாயிருந்தது' என்றுகருதி, நெஞ்சில்வெகுண்டு - மனத்திற் கோபங்கொண்டு,- (தனது வடிவத்தின் பெருமையை நோக்கி), உயர் அண்டர் அஞ்சினம் அஞ்சினம் என்று விரைந்து பணிந்திடவும் - மேலிடத்திலுள்ள தேவர்கள் பயந்தோம் பயந்தோமென்று கூறி நமஸ்கரிக்கவும், வல்பணியின் கிளை இன்று துஞ்சினம் என துன்பம் உழந்திடவும் - (கீழுலகிலிருந்து பூமியைத் தாங்கும்) வலிய பாம்புவருக்கங்கள் (அப்பெருவடிவத்தின் பாரமிகு |