பக்கம் எண் :

252பாரதம்உத்தியோக பருவம்

தனயர்-(அவனது) புத்திரர் பலரும், அங்கு அவையின்கண் இருந்த நர
அதிபர்- (இன்னும்) அப்பொழுது அச்சபையிலிருந்த அரசர்களும், அடைய -
எல்லோரும், எழுந்து - எழுந்திருந்து, அடைவே - முறைப்படி, செம் கை
குவித்த சிரத்தினர் ஆய் - சிவந்த கைகளைத் தலைமேற் கூப்பியவர்களாய்,
உணர்வு ஒன்றிய சிந்தையர் ஆய் - அறிவுள்ள மனமுடையவர்களாய்,
எங்கள்பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று - 'எங்கள் குற்றங்களை
இப்பொழுது(நீ) பொறுத்தருள்வாயாக'  என்று சொல்லி, பணிந்தனர் -
வணங்கினார்கள்; (எ- று.)

     இது -பரவசமாக நிகழ்ந்தது.  குற்றம் துரியோதனனது ஆயினும்,
அதனைத் தாங்கள் தடுக்காமலே உடன்பட்டாற் போலிருந்ததனால், 'எங்கள்
பிழைப்பு' என்றது.  பிழைப்பு - பிழைசெய்தல்; தொழிற்பெயர்.  செங்கை
குவித்த சிரத்தினர் - செங்கை சிரசிற் குவித்தனரென விகுதிபிரித்துக்
கூட்டப்பட்டது.  நராதிபர் - மனிதர்க்குத் தலைவர்; நர + அதிபர்
எனப்பிரியும்.  தலைமேற் கைகளைக் குவித்து வணங்குதல், திரியங்க
நமஸ்காரமெனப்படும்.                                   (271)

212.

கண்ணபொறுத்தருள் வெண்ணெயருந்திய கள்வபொறுத்
                                       தருள்கார்,
வண்ணபொறுத்தருள் வாமபொறுத்தருள் வரதபொறுத் தருணீ,
திண்ணமனத்துணர்வொன்றுமிலாதவர் செய்தபெரும்பிழையென்,
றண்ணன்மலர்க்கழல் சென்னியில்வைத்தெகி ரன்றுதுதித்தனரே.

     (இ -ள்.) 'கண்ண - ஸ்ரீகிருஷ்ணனே! மனத்து திண்ணம் உணர்வு
ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை - மனத்தில் உறுதியான அறிவு
சிறிதுமில்லாத நாங்கள் செய்த பெரிய குற்றங்களை, நீ பொறுத்தருள்-;
வெண்ணெய் அருந்திய கள்வ - வெண்ணெயைக் களவுகொண்டு அமுது
செய்தவனே! பொறுத்தருள்-; கார்வண்ண  மேகம் போன்ற
கருநிறமுடையவனே! பொறுத்தருள்-; வாம - பேரழகுடையவனே!
பொறுத்தருள்-; வரத - (அடியார்களுக்கு வேண்டிய) வரங்களைத் தருபவனே!
பொறுத்தருள்-,' என்று - என்றுசொல்லி, அண்ணல் மலர் கழல் சென்னியில்
வைத்து - பெருமையிற் சிறந்த கண்ணபிரானது தாமரைமலர்
போலுந் திருவடிகளைத் தம்தலையின்மேல் வைத்து வணங்கி, அன்று -
அப்பொழுது, எதிர் - எதிரில், துதித்தனர் - துதிசெய்தார்கள்; (எ -று.) -
இதற்கு முற்பாட்டிலுள்ள 'கங்கை மகன்' முதலியோர்களே எழுவாய்.

    க்ருஷ்ணனென்னும் வடமொழி, பிராகிருத பாஷை மூலமாய்க் கண்ணன்
எனத் திரிந்துவந்தது; 'கண்ணனென்பது - கரியானென்னும் பொருளதோர்
பாகதச்சிதைவு' என்று திருக்கோவையாருரையில் பேராசிரியர் கூறியவாறு
காண்க.  இலாதவர்  தம்மைப் பிறர்போற் கூறியது; தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி.                                  (272)