213 - கண்ணன் விசுவரூபத்தைஅடக்கிக்கொள்ளுதல். தேவரும்வாசவனுந்தவருந்திசைமுகனுநராதிபரும் யாவருமன்பினொடாயிரநாமமுமெண்ணியிறைஞ்சுதலான் மூவருமொன்றெனநின்றருணாதனுமுனிவுதவிர்ந்தருளா மீவருமண்டமுறுந்திருமேனியொடுங்கினன்மீளவுமே. |
(இ -ள்.) தேவரும் - தேவர்களும், வாசவனும் - (தேவர்களுக்கு அரசனான) இந்திரனும், தவரும் - தவஞ்செய்துள்ள முனிவர்களும், திசைமுகனும் - நான்கு திக்கையும் நோக்கின நான்கு முகத்தையுடைய பிரமனும், நர அதிபரும் - மனிதர்களுக்குத் தலைவரான அரசர்களும், யாவரும் - (மற்றும்) எல்லோரும், அன்பினொடு - பக்தியுடனே, ஆயிரம் நாமமும் எண்ணி - (எம்பெருமானது) ஆயிரந்திருப்பெயர்களையுந் தியானித்து,இறைஞ்சுதலால், - வணங்கினதனால், - மூவரும் ஒன்று என நின்றருள்நாதனும் - திரிமூர்த்திகளும் ஏக மூர்த்தி யென்னும்படி (அவ்வவ்வடிவமாய்)நின்றருளுகிற தலைவனான கண்ணனும், முனிவு தவிர்ந்து அருளா -கோபந்தணிந்தருளி, மீவரும் அண்டம் உறும் திருமேனி - மேன்மைபொருந்திய அண்ட கோளமுழுவதிலும் பரந்த (தனது) பெரிய அவ்விசுவரூபம்,மீளவும் ஒடுங்கினன் - மறுபடி ஒடுங்கப்பெற்றான்; (எ - று.)
ஆயிரநாமம் - ஸஹஸ்ர நாமம். இறைஞ்சுதலால் ஒடுங்கினன் என்று இயையும். தவர் என்பதற்கு - தபோலோகத்தவரென்று உரைப்பாரு முளர். சர்வசங்கார காலத்தில் பிருமருத்திரர் திருமாலின் திருமேனியில் ஒடுங்குதலால்,'மூவருமொன்றென நின்றருள் நாதன்' என்றார். (273) 214.-துரியோதனன் சிறிதும்மனஞ்சலியாமை. தன்னிலுயர்ந்தவர்யாருமிலாமுகில்சதுர்மறையின்படியே யெந்நிலமுந்திருவடியின்மறைந்திடவிப்படிநின்றிடவும் பின்னையுமஞ்சியயர்ந்திலனெஞ்சுபெயர்ந்திலனாசனமும் சென்னியிலுங்கரம்வைத்திலன்வண்புகழ்சிறிதுமொழிந்திலனே. |
(இ -ள்.) தன்னில் உயர்ந்தவர் யாரும் இலா முகில் - தன்னைக்காட்டிலுஞ் சிறந்தவ ரெவரையும் பெறாத காளமேகம்போன்ற கண்ணபிரான், சதுர்மறையின்படியே - நான்கு வேதங்களிற் கூறியுள்ளபடியே, எந்நிலமும் திரு அடியில் மறைந்திட - பூலோகம் முழுவதும் தனது திருவடியின்கீழ் மறைந்தபோம்படி, இப்படி நின்றிடவும் - இவ்வாறு (பெரிய விசுவரூபத்தைக்கொண்டு) நிற்கையிலும், பின்னையும் - அவ்வடிவமொடுங்கிய பின்பும், (துரியோதனனொருவன்), அஞ்சி - பயந்து, நெஞ்சு அயர்ந்திலன் - மனம் சோர்ந்தானில்லை; ஆசனமும் பெயர்ந்திலன் - (தான் வீற்றிருந்த) சிங்காதனத்தினின்று சிறிது எழுந்தானுமில்லை; சென்னியிலும் கரம் வைத்திலன்- (தன்) தலையின்மேற் கைகளைவைத்தானுமில்லை; வள் புகழ் சிறிதும்மொழிந்திலன் - சிறந்த (அப்பிரானது) கீர்த்தியைச் சிறிதாயினுங் |