பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 265

எண்ணம்முடியுமென்ற தெளிவால்.  முந்தக் கருதுகின்ற - முன்னமே
தொடங்கி எண்ணி வருகின்ற என்றும், தவிசினிடையே உடனிருத்தி -
தானிருந்த ஆசனத்திலேயே உடன் வீற்றிருக்கச்செய்து என்றும் உரைக்கலாம்.
முந்தக் கருதுகின்ற வினை - கர்ணனாற் போரில் அருச்சுனன்
கொல்லப்படாதபடி காத்தல் கருதுகின்ற வினை.  பெயரெச்சம்,
செயப்படுபொருள் கொண்டது.                     (291)

232.- இதுமுதல் ஆறு கவிகள் -ஒரு தொடர்: கண்ணன்
இந்திரனுக்கு உபாயங் கூறுதல்.

கிரியின்சிறகையரிபடையாய்கேண்மோவாண்மைக்களமீதில்
வரிவெஞ்சிலைக்கைவிசயனுக்குமாறாய்முனிந்துவருகின்ற
வெரியுங்கனல்வாய்விடவரவொன்றிவனுக்குற்றபகையான
அரியின்புதல்வன்றனக்கொருபேரம்பாகியதாரறியாதார்.

     (இ -ள்.) கிரியின் சிறகை அரி படையாய் - மலைகளின் இறகுகளை
அறுத்திட்ட வச்சிராயுதமுடையவனே! கேண்மோ - (யான் சொல்வதைக்)
கேட்பாயாக; ஆண்மை களம் மீதில் - பராக்கிரமத்தைக் காட்டுதற்கிடமான
போர்க்களத்து முனையில், வரி வெம் சிலைக்கை விசயனுக்கு மாறு ஆய் -
கட்டமைந்த கொடிய வில்லையேந்திய கையையுடைய அருச்சுனனுக்குச்
சத்துருவாகி, முனிந்து வருகின்ற - (நெடுநாளாகக்) கறுக்கொண்டுவருகிற,
எரியும் கனல் வாய் விடம் அரவு ஒன்று - பற்றியெரிகிற நெருப்புப்போன்ற
நுனியையுடையதொரு விஷப்பாம்பு, இவனுக்கு உற்ற பகை ஆன அரியின்
புதல்வன் தனக்கு - இவ்வருச்சுனனுக்கு மிகுந்த பகையாளியாகிய சூரிய
புத்திரனான கர்ணனுக்கு, ஒரு பேர் அம்பு ஆகியது - ஒரு பெரிய
அஸ்திரமாயமைந்திருப்பதை, அறியாதார் ஆர் - (உலகத்தில்) அறியாதவர்
எவர்? [யாருமில்லை; மிகப் பிரசித்தமாக எல்லோரும் அறிவர் என்றபடி];
(எ -று.)

    எரியுங் கனல்வாய் அரவு என்பதற்கு - (காண்டவவனத்தில்) எரிகிற
அக்கினியினின்று எழுந்த பாம்பென்றும் உரைக்கலாம்.  கேண்மோ, மோ -
முன்னிலை யசை.  அரியென்னும் பலபொருளொரு சொல், இங்கே
சந்தருப்பத்திற்கேற்பச் சூரியனைக் குறித்தது: (இருளை) அழித்தல்பற்றி,
ஹரியென்று சூரியனுக்குப் பெயர்.  இனி, ஆய் என்பதை ஆகவென்பதன்
திரிபெனக்கொண்டு, மாறு ஆய் - சத்துருவாதற்கு என்றுமாம்.      (292)

233.

கன்னன்விசயன்றனைக்கொல்லிற்கடற்பார்முழுதுங்கண்ணில்லா
மன்னன் புதல்வன்றனக்கேயாமொழிந்தோர் தாமுமடிந்திடுவார்
முன்னஞ்சூதின் மொழிந்தபகை முடியாதிருக்கினவர்க்கன்று
நின்னெஞ்சறியயானறிய நினக்கேவசையுநிலையாமே.

   (இ - ள்.) (அந்த அம்பைக்கொண்டு), கன்னன் விசயன்தனை கொல்லின்-
கர்ணன் அர்ச்சுனனைக் கொன்றிட்டால், கடல் பார் முழுதும் - கடல் சூழ்ந்த
பூலோகம் முழுதும், கண் இல்லா மன்னன் புதல்வன் தனக்கே ஆம் -
திருதராட்டிர புத்திரனான துரியோதன