பக்கம் எண் :

272பாரதம்உத்தியோக பருவம்

கறுத்தவர் -எதிரிற் கோபித்துநின்ற பகைவர்களை, கண் இணை சிவப்ப -
இரண்டு கண்களும் சிவக்கும்படி, உருத்த - உக்கிரமாகச் செய்கிற, போரினில்
- யுத்தத்தில், புறம் தரு - முதுகு கொடுத்துச் செல்கிற, நிருபர் - அரசர்கள்
போய்ச் சேர்கிற, பதம் - துர்க்கதியை, உறுவன் - அடைவேன்', என்று
உரைத்தான் - என்று கூறினான்; (எ - று.)

    கருத்தின்றிக் கொடுத்தல், சிறப்புடைய தானமாகாது.  கருமை யென்ற
பண்படி திரிந்து வினைப்பகுதித் தன்மைப்பட்ட கறுத்தல் என்பது -ஒருவகை
நிறத்தை மாத்திரமே யன்றிக் கோபத்தையும் உணர்த்துவதாதலை, "கறுப்புஞ்
சிவப்பும் வெகுளிப்பொருள" என்னுந் தொல்காப்பியத்தாலும் அறிக.
வீரர்க்கும்போரில் புறந்தருதல் மிகப்பாவம். இங்கே, நகைத்தல் -
தன்னைப்பிறன்இகழ்ந்தது காரணமாக வந்தது.  அளித்தியோ, ஓகாரம் -
வினாவோடுஎதிர்மறை குறிக்கும்.  விருத்தன் - வருத்தன்; வடமொழி.(301)

242.- கர்ணன்இந்திரனுக்குக் கவசகுண்டலங்களை
அளித்தல்.

வந்தவந்தணன் கவசகுண்டலங்களை வாங்கிநீவழங்கெனக்கென்னத்
தந்தனன்பெறுகெனவவன்வழங்கவிண்டலத்திலோர் தனியசரீரி
யிந்திரன்றனைவிரகினான் மாயவனேவினான்வழங்கனீயெனவுஞ்
சிந்தையின்கணோர்கலக்கமற் றளித்தனன்செஞ்சுடர்த்தினகரன் சிறு
                                                 [வன்.

     (இ -ள்.) (அதுகேட்டு), வந்த அந்தணன் - (இரப்பதற்கு) வந்த அந்த
பிராமணன், கவசகுண்டலங்களை வாங்கி நீ எனக்கு வழங்கு என்ன -
('கூடப்பிறந்த) கவசத்தையுங் குண்டலங்களையும் (உன் உடம்பினின்று) கழற்றி
நீ எனக்குக்கொடு' என்று கேட்க, (உடனே), அவன் - அக்கன்னன், 'தந்தனன்
பெறுக என வழங்க - கொடுத்து விட்டேன் பெற்றுக்கொள்வாயாக' என்று
சொல்லி (அவற்றை) அவனுக்குக் கொடுக்கலுறுகையில், விண்தலத்தில் -
ஆகாயத்தினிடத்திலே, ஓர் தனி அசரீரி - ஒப்பிலாததொரு ஆகாயவாணி,
(கன்னனைநோக்கி), 'மாயவன் இந்திரன்தனை விரகினால் ஏவினான் -
கண்ணன் இந்திரனை வஞ்சனையால் (இங்ஙனம் இரக்க) அனுப்பினான்;
(ஆதலால்), நீ வழங்கல் - நீ கொடுத்திடாதே,' எனவும் - என்று
சொல்லவும்,-(அதுகேட்டு இல்லை என்னாமல்), செம் சுடர் தினகரன் சிறுவன்
- சிவந்தகிரணங்களையுடைய சூரியனது புத்திரனான கர்ணன், சிந்தையின்
கண் ஓர்கலக்கம் அற்று - மனத்திற் சிறிது கலங்குதலு மில்லாமல்,
 அளித்தனன் -(அவனுக்கு அவற்றைக்) கொடுத்திட்டான்; (எ - று.)

    இதனால், கர்ணனது வரம்புகடந்த வள்ளன்மை விளங்கும்.  வடமொழி
முடிபான கவசகுண்டலமென்னும் உம்மைத்தொகை, பன்மையீறு பெற்றது.
தந்தனன்-தெளிவும் விரைவும் பற்றி, எதிர் காலம் இறந்த காலமாயிற்று.
அசரீரி - உடம்புடையதல்லாத சொல் தெய்வம்: ஓருருவமுங் கண்ணுக்குப்
புலப்படாமல் பேச்சுமாத்திரங்கேட்பது. இது இங்குச் சூரியனேவலால்
இங்ஙனம்கூறிற்று.