பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 273

உண்மையையுணர்த்து எடுத்துக் கூறின உயர்வை நோக்கி இதற்கு 'தனி'
என்றஅடைமொழி ஏற்கும்.  சூரியனது தொழில் எதனாலுந்
தடைப்படாததுபோல,இவனது தொழிலும் எதனாலுந் தடுக்கப்படாதது என்ன,
'தினகரன் சிறுவன்'என்றார்.                           (302)

243.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: இந்திரன்கர்ணனுக்கு
வேல் கொடுத்தல்.

அண்டர்யாவருமலர்மழைபொழிந்தனரந்தரதுந்துபியார்ப்பக்,
கொண்டல்வாகனன் கொண்டமெய்யொழிந்துதன்கோலமெய்யுடன்
                                   வெளிநின்றான்,
கண்டுமாமனமுருகியேகளித்திடுங்கன்னனுக்கந்நெடுங்கடவுண்,
மண்டுபோரினில் வயந்தருமிதுவென மற்றோரு கொற்றவே
                                       லெடுத்தே.

     (இ-ள்.) (அங்ஙனங்கொடுத்தபொழுது), அண்டர் யாவரும் -
தேவர்களெல்லோரும், அந்தர துந்துபி ஆர்ப்ப - ஆகாயத்திலுள்ள
தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்க, அலர் மழை பொழிந்தனர் -
புஷ்பவருஷத்தைச் சொரிந்தார்கள்; கொண்டல்வாகனன்-மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரன், கொண்ட மெய் ஒழிந்து - (தான் கபடமாக)
எடுத்த கிழப்பிராமண வடிவம் நீங்கி, தன் கோலம் மெய்யுடன் வெளி
நின்றான்- தனது அழகிய இயற்கையாகிய வடிவத்துடனே
வெளிப்பட்டுநின்றான்;கண்டு-(அங்ஙனம் தேவராசனான இந்திரன் தன்னிடம்
வந்து இரந்துபெற்றதைப்) பார்த்து, மா மனம் உருகி - பெருமைக்
குணமுடைய தனது மனங்கரைந்து, களித்திடும் - மிக மகிழ்கிற, கன்னனுக்கு
- கர்ணனுக்கு, அ நெடுங்கடவுள் - அந்தச் சிறந்த தேவனான இந்திரன்,
மற்று-பின்பு, மண்டு போரினில்வயம் தரும் இது என - 'கொடுமையாகிய
மிக்க யுத்தத்தில் வெற்றியைக்கொடுக்கும் இவ்வாயுதம்' என்று கூறி, ஒரு
கொற்றவேல் எடுத்து -வெற்றியைத்தருவதொரு வேலாயுதத்தைக்
கையிலெடுத்து, (எ - று.)
-'கொடுப்ப'என மேற்கவியோடு தொடரும்.

    அலர்மழை பொழிதல் - பூக்களை மழைபோல மிகுதியாகச் சொரிதல்;
அந்தர துந்துபி - வடசொற்றொடர்.  வாஹநம்-வகிப்பதென்று பொருள்.
வகித்தல் - சுமத்தல். காளமேகத்தை இந்திரனுக்கு வாகன மெனக் கூறுதல்
கவிசமயம்.  தெய்வத்தன்மையால், நினைத்தலும் வேல் இந்திரன் கைக்கு
வந்தது.  யாவரும் மலர் என்றும்பிரிக்கலாம்.     (303)

244.

வெலற்கருந் திறல்விசயன்மேலொழித்துநீ வெஞ்சினமடங்கல்
                                     போனெஞ்சிற்,
கலக்கமொன்றறப்பொருதிறல்புனைந்திடுகடோற்கசக்காளை
                                      தன்னுயிரே,
யிலக்குவந்தெதிர்மலைந்தபோதிதற்கெனவே
                          வெனமறையையுமியம்பிச்,
சொலற்கரும்புகழ்ச்சுரபதிகொடுப்பவத்தோன்றலுந்தொழுதுகைக்
                                     கொண்டான்.

     (இ -ள்.) '(இந்த வேலாயுதத்தை), நீ-, வெலற்கு அருந்திறல்விசயன்
மேல் ஒழித்து - (எவராலும்) வெல்லுதற்கு முடியாத வல்லமையையுடைய
அருச்சுனன்மேற் பிரயோகிப்பதை விட்டு, வெம் சினம் மடங்கல்போல்-
கொடியகோபத்தையுடைய ஆண்சிங்கம்