பக்கம் எண் :

276பாரதம்உத்தியோக பருவம்

என்று -என்று சொல்லி, (எ - று.) - 'விடை கொடுத்ததன்பின்',
எனமேற்கவியோடு தொடரும்.

    உத்தமரது தானச்சிறப்பை யெடுத்துக்கூறுவார், அதற்கு எதிராகிய
அதமரதுலோபகுணத்தின் இழிவையும் உடனெடுத்துக் காட்டினார்.  இங்கே
'கர்ணன்மிகுந்த கொடையாளி' என்ற சிறப்புப் பொருளை 'உத்தமரது
உதாரகுணம்இத்தன்மையது' என்ற பொதுப்பொருள்கொண்டு விளக்கியது
வேற்றுப்பொருள் வைப்பணி.இரந்தவற்கு - இரந்த உனக்கு என
முன்னிலைப்படர்க்கை.  உயிரினும் அரியது இன்றாதலின், 'ஆருயிர்'
எனப்பட்டது.  ஆருயிர் - பண்புத்தொகை; இனிவினைத்தொகையாகக்
கொண்டு, நிறைந்த [பஞ்ச] பிராணன்களென்றுமாம்.எண்மையாயினும்
கிளைஞரே யேற்பினும், ஆருயிர்மாற்றலார் கேட்பினும்என்றவற்றால்,
உலோபிகளுக்கும் உதாரகுணமுடையார்க்கும் உள்ள வேறுபாடு
நன்குவிளக்கப்பட்டது.  வண்மையாளர் - வண்மைக்குணத்தை யாள்பவர்.
மாற்றலார் - தம்மிடத்து மனத்தை மாற்றுதலுடையவரென உடன்பாட்டுக்
குறிப்பு வினையாலணையும்பெயராகிய காரணக்குறி.  பின் இரண்டடி - உலக
இயற்கை கூறியது.  எண்மை என்னும் பண்புப் பெயரில் எள் - பகுதி; அது
இகரம் பெற்று எளிமையென்றும் நிற்கும்.  செல்வம் படைத்ததற்குப் பயன்
பிறர்க்குக் கொடுத்தலே யாதலால், அத்தன்மையில்லாதாரை, 'இயல்பிலாப்
புன்செல்வர்' என்றார்.  (306)

247.- கண்ணன் குந்தியைக்கர்ணனிடம் அனுப்புதல்.

வாசவன்றனக்குவிடைகொடுத்ததன்பின்வந்தகாரியந்தனை
                                     முடிப்பான்,
கேசவன்றனதுதாதையோடுதித்த கேண்மைகூர்தெரிவையைக்
                                        கிட்டித்,
தேசவன்றந்தகுரிசில்பால்விரைவிற்செல்கெனப் பயந்த
                                    சேயிழையும்,
பாசமுன்னுறமாலேவலாற்றனதுபாதபங்கயஞ்சிவப்பித்தாள்.

     (இ -ள்.) வாசவன் தனக்கு - இந்திரனுக்கு, விடைகொடுத்ததன் பின்-
செலவு கொடுத்தனுப்பியபின், கேசவன் - கண்ணன், வந்த காரியந்தனை
முடிப்பான் - (தான் திருவுள்ளத்திற்கருதி) வந்த தொழிலை
நிறைவேற்றும்பொருட்டு, தனது தாதையோடு உதித்த கேண்மை கூர்
தெரிவையை கிட்டி - தனது தந்தையாகிய வசுதேவருடன் பிறந்த [தனது
அத்தையாகிய] (யாவரிடத்தும்) அன்பு மிக்க குந்திதேவியை அடைந்து,
தேசவன் தந்தகுரிசில்பால் விரைவின் செல்க என - ஒளிமிகுதியையுடைய
சூரியன் பெற்ற குமாரனான கர்ணனிடத்திற் சீக்கிரமாகச் செல்வாயென்று
சொல்ல,- பயந்த சேயிழையும் - (அவனைப்) பெற்றவளான குந்திதேவியும்,
பாசம் முன்உற - (மைந்தனாகிய கன்னன்பக்கல்) அன்பு (தனக்கு) முன்
செல்ல,மால் ஏவலால் - கண்ணனது கட்டளைப்படி, தனது பாதபங்கயம்
சிவப்பித்தாள்- தன்னுடைய தாமரைமலர்போன்ற கால்களைச்
சிவக்கச்செய்தாள்; (எ - று.)