தார்மன்னவர் இருந்தபின் - வண்டுகள்மொய்க்கும் பூமாலையை யணிந்த அவ்வரசர்கள் (தக்க ஆசனங்களில்) வீற்றிருந்தபின்பு, சென்று - (அவரருகிற்) சென்று, அவர் முகம் நோக்கி - அவர்களது முகத்தைப் பார்த்து,- 'யான்-, வணங்கி - பணிந்து, மா மாயனை தூது விட்டு - மிக்கமாயையுடைய கண்ணபிரானைத் தூதனுப்பி, எனது பார் எனக்கு என்ன - யான் முன் ஆண்டுவந்த இராச்சியம் (இப்பொழுது) எனக்கு (த் தரத்தக்கது) என்று கேட்க,- வான் வணங்கினும் வணங்கலா முடியினான் - தேவர்கள் (வந்து தன்னைப்) பணிந்தாலும் எதிர்பணியாத சிரத்தையுடைய துரியோதனன், மறுத்து- (சிறிதுங்கொடேனென்று என்வேண்டுகோளை) உபேட்சித்து, அமர் புரிகஎன்றான் - (வல்லவராயின்) போர்புரிவாராக என்று கூறிவிட்டான்; (எ - று.) இப்பாட்டில் இரண்டாமடியில் 'நோக்கி' என்ற வினையெச்சம், அடுத்த கவியிறுதியில் 'என்றான்' என்ற முற்றொடுமுடியும். தேன் - வண்டின் ஓர் சாதி; அது - நல்லமணத்தேசெல்வது. இனி, தேன் வணங்கு தார் - தேனொழுகும் மலை யென்றுமாம். 'வணங்கு', என்பதற்குச் சந்தர்ப்பத்திற்கு ஏற்பப் பொருள்கொள்ளப்பட்டது. 'தார்' என்றதில், போர்வெற்றிக்குரிய பூமாலையும் அவரவர்க்குரிய அடையாளப் பூமாலையும் ஆக இரண்டும் அடங்கும். சென்றவர் என ஒரு சொல்லாக எடுத்து, வந்தவரெனக்கொள்ளலுமாம். வணங்கி என்றதற்கு - கண்ணனை நமஸ்கரித்து என்றாவது, கீழ்ப்படிந்து துரியோதனனோடு சாமவுபாயத்திற்பொருந்தி யென்றாவது கருத்துக்கொள்க. மாயையாவது - கூடாததையும் கூட்டுவிக்குந் திறம். அகடிதகடநா சாமர்த்தியம்; பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்; ஆச்சரியகரமான குணங்களுஞ் செயலுமாகலாம். மாயவன் - மாயைபோற் கருநிறமுடையா னெனினுமாம். வான் - அதிற்சஞ்சரிக்குந் தேவர்க்கு இடவாகுபெயர்.துரியோதனனுக்கு 'வணங்கா முடிமன்னன்' என்று ஒருபெயர். 'மன்னவன்'என்றும் பாடம். (333) 10.-இதுவும் அது. கேண்மையாலெனதரசுநீதருகெனக்கேட்கவுமதியாமல், ஆண்மையாலவன்மறுத்தமையெனக்குயிரனையநீரறிமின்கள், வாண்மையால்வரிவின்மையான்மேன்மையால்வலியுரைக்கலனுங்கள், தோண்மையாலமர்தொலைத்தடல்வாகையுஞ்சூடுவனினியென்றான். |
(இ -ள்.) கேண்மையால் - சினேகதருமத்தால் [சமாதானவழியால் என்றபடி], எனது அரசு நீ தருக என - எனக்கு உரிய இராச்சியத்தை நீ கொடுப்பாயாக வென்று, கேட்கவும் - (யான் கண்ணனைக் கொண்டு வேண்டிக்) கேட்டிடவும், அவன் - அத்துரியோதனன், மதியாமல் - இலட்சியஞ் செய்யாமல், ஆண்மையால் - (தனது) பராக்கிரமத்தால், மறுத்தமை- (இராச்சியங் கொடுக்கமாட்டேனென்று) மறுத்துவிட்டதை, எனக்கு உயிர்அனைய நீர் - எனக்கு உயிரைப் போலச் சிறந்த ஆதாரமான நீங்கள்,அறிமின்கள் - அறிந்திருங்கள்; வாண்மையால் - வாளின்தொழில் வன்மையாலும், வரி வின்மையால் - கட்டமைந்த வில்லின் தொழில்வன்மையாலும், மேன்மையால் - |