கருவி -சங்கீதக்கரவிகளும், உடனே - ஒன்றாக, எழு கடல் கொதித்தது என - ஏழு கடல்களும் பொங்கியது போலவும், எழு புவி மறித்தது என -ஏழு தீவுகளும் எதிர்த்தது போலவும், எழுமுகில் இடித்தது என - ஏழு மேகங்களும்இடிமுழங்கியது போலவும், உழை உழை அதிர்த்த - (அச்சேனையின்)இடந்தோறும் ஒலித்தன; (எ - று.) இதில்- தோற்கருவி, கஞ்சக்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி என்னும்நால்வகை இசைக்கருவிகளுங் கூறப்பட்டமை காண்க. உழை முதல் எழுப்புவன இசை - உழை, இளி, விளரி, தாரம், குரல் துத்தம், கைக்கிளை, என்பன. நரப்புக்கருவி - யாழ் முதலியன. உழைஉழை - அடுக்கு, தொறுப்பொருளது. (388) 28.- இது - துரியோதனனதுபாம்புக்கொடியின் வருணனை. முறைமைதவறற்றகடிமுரசெழுபொற்றுவசமுதல்வனுயிர்மைத் துனமையால், விறலுதவுதற்குவருகரியவன்மணித்துவசமிசைகருடனிற்குமெனவோ, வெறிகொளுருமுத்துவசன்மதலைவிதலைச்சமரினிறுதியைவிளைக்கு மெனவோ, வறைவளியெதிர்த்துவரவெருவொடுபுறக்கிடுவதரசனுரகத்துவசமே. |
(இ -ள்.) முறைமை தவறு அற்ற - நீதி தவறுதலில்லாத, கடி முரசு எழுது பொன் துவசம் முதல்வன் - ஒலிக்கின்ற பேரிகைவடிவத்தை யெழுதின அழகிய கொடியையுடைய தலைவனான யுதிஷ்டிரனது, உயிர் மைத்துனமையால் - உயிரோடொத்த [மிக்க அன்புக்கிடமான] மைத்துன உரிமையால், விறல் உதவுவதற்கு வரு - (அவனுக்கு) வெற்றியைத் தருதற்கு வருகிற, கரியவன் - கருநிறமுடைய கண்ணபிரானது, மணி துவசம் மிசை - அழகிய கொடியின்மேலே, கருடன் நிற்கும் - (எனக்கு இயற்கைப்பகையான) கருடன் நிற்பான், எனவோ - என்று எண்ணியோ? வெறிகொள் - யுத்தாவேசத்தைக் கொண்ட, உருமு துவசன் மதலை - (எனக்குப்பகையான) இடியையெழுதிய கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன், விதலை சமரின் - (காண்பவர் கேட்பவருக்கு அச்சத்தால்) நடுக்கத்தைத் தருகிறபோரிலே, இறுதியை விளைக்கும் - (முன்காண்டவதகன காலத்தில் சிறந்தபாம்புகளை அழித்ததுபோல எனக்கு) அழிவை யுண்டாக்குவான், எனவோ -என்று எண்ணியோ? வெருவொடு - அச்சத்தோடு, அரசன் உரகம் துவசம் -துரியோதன ராசனது பாம்புக்கொடி, அறை வளி எதிர்த்து வர-வீசுகிற காற்றுஎதிர் முகமாய் வருகையில், புறக்கு இடுவது - பின்னுக்குச் செல்வது; (எ - று.) துரியோதனனது தேர் மிக விரைவாகச் செல்லுகையில் வீசும் எதிர் காற்றால் அத்தேரின்மீதுள்ள பாம்புக்கொடி இயற்கையாக அசைந்து பின்னிடுதலை, அக்கொடியிலுள்ள பாம்பு சிலகாரணங்களால் அஞ்சிப் புறங்கொடுப்பதாகக் கற்பித்துக் கூறினர்; இது ஏதுத்தற்குறிப்பேற்றவணி. கரியவன் - க்ருஷ்ணன். புறத்துக்கு என் |