அபிதான சூசிகை யகராதி. அகத்தியன்- விந்தமலையொடுக்கினவன், கிருட் -198.
அசுவசேனன்- காண்டவவனம் எரிந்தபோது தப்பி அகன்று போனபாம்பு; இதனைக் கர்ணன் ஆசுகமாகக்கொண்டான், கிருட் - 158.
அசுவத்தாமா -துரோணன் மகன்;ஐந்தூர் வேண்டமறுத்ததற்குச் சாட்சியாவன், கிருட் - 224; ஞானாதிபன், ஆண்மையில் நிகரற்றவன், கிருட் - 225; கண்ணபிரானால் மோதிரம் வீழ்த்திப் பேதிக்கப்பட்டவன், கிருட் -226 - 229; ஒரு நாழிகையினில் சேனைகளை யடங்கவும்மலையவல்லவன், அணி -32.
அசுவிநீதேவர்கள்-ஆயுர்வேதமறிந்த தேவவைத்தியர்கள்; இவர்கள் நகுலனையும்சகதேவனையும் அளித்தவர், கிருட் 219.
அசோதை -கண்ணபிரானை வளர்த்ததாய், வாசு - 1.
அபிமன்னு -கண்ணனுடன் பிறந்தவளான சுபத்திரையினிடம் அருச்சுனனுக்குப் பிறந்த புத்திரன்; இளமையிலேயே வில்வித்தையில் ஒப்புயர்வின்றி மிகச்சிறந்தவன், கிருட் - 50.
அருச்சுனன் -விசயன், உலூக - 12;தனஞ்சயன், உலூக - 15; நரன்,உலூக - 18, வாளி வெருநர்மேல் விடான், உலூக - 19. ஐயிருநாமத்தோன், வாசு - 20;சிந்தையிற்கடிய தேரோன்,வாசு - 10; இந்திரன் மதலை,கிருட் - 22, 160; குரங்குத்துவசமுடையவன், கிருட் - 234. பாண்டவசேனைக்குத் தோள் போன்றவன், அணி - 16; ஒருகணப்பொழுதினுள் புவியும் வானும் புரந்தரனுலகும் வெருவர முனைந்துமலையவல்லவன்; அணி - 32.
இந்திரன் -மகவான், கிருட் - 20; முகிலையூர்தியாகவுடையவன், கிருட் - 22; வச்சிரப்படையால் மலைகளின் சிறகீர்ந்தவன், கிருட் -195, 232; விசயனை நல்கியவன், கிருட் - 219; ஆகண்டலன், கிருட் - 231; வாசவன், கிருட்- 213, புத்தேளரசன், கிருட் - 237; கொண்டல் வாகனன், கிருட் - 243; உருமுத்துவசன், அணி- 28.
இராயசூயம் - அரசர்களனைவரையும் வென்று அவர்தரும் திறைப்பொருள்கொண்டு செய்யப்படுவதொரு பெரு வேள்வி, சஞ்-17. இராவான் - உலூபியென்னும் நாககன்னிகைக்கு அருச்சுனனிடம் பிறந்தவன்; துரியோதனன் படைகளையெல்லாம் ஒரு பகற்பொழுதில் கொல்ல உறுதி கூறி நின்றவன், படை - 12, முகூர்-3: கண்ணனோடு ஒத்த உத்தமவிலக்கண முடையவன், களப்-5; தன்னைப் பலிதந்தாலும் சிலநாள் வரையில் உயிரோடிருக்கும்படி கண்ணனிடம்வரம்வேண்டினன், களப்-6. தருமனால்களப்பலியூட்டப்பட்டவன்; கள - 7, 8; உறுப்புக்களையறுத்துப்பலிகொடுத்தும் மலர்ந்த தீபமென முகங்கவினநின்றவன், களப் - 8. |