னாகக்கண்ணனால் அனுப்பப்பட்டவன், வாசு-18: அணி-19:
கிருபன் - முதலில்கௌரவ பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றிய ஆசிரியர், உலூக-15: துரியோதனனுக்காகத் துணை போக, இவர் சமரதத்தலைவராகப் பிரிக்கப்பட்டவர், அணி - 19.
குந்தி - கன்னனைப்பயந்த கன்னி,கிருட் - 147: குந்திதேசத்தரசன் பெண், கிருட்-161: பெண்மையினாலுயர்ந்தவன், கிருட் -218: வசுதேவர்க்கு உடன்பிறந்தமுறையினள், கிருட்-247: கர்ணனால் சராசரங்களுக்கெல்லாம் தாய் என்னப்பட்டவள்,கிருட்-260.
குந்திபோசர் -குந்தியின் சுவீ காரத் தந்தைமரபினர், படை- 4.
சகதேவன் -புகலரியவுணர்வுடையவன்,கிருட்-30: தெய்வமன்னான், கிருட்-32: தூயவன், கிருட் - 37: முகூர்த்தம் வல்லோன்,முகூர்-2: கிளைஞரைவேறிடாதான், முகூர் - 4. பாண்டவசேனைக்குக்கால்போன்றவன், அணி-16.
சகுனி சுபலன்புத்திரன், கிருட் - 178:துரியோதனனுக்கு மாமன், கிருட்-180: வஞ்சகச் சூதில் வல்லவன், படை-17: சமரதத் தலைவர்,அணி - 19.
சஞ்சயன் -கவல்கணன் குமாரன்:[காவல்கணியெனவும் படுவன]: திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன், குருகுலத்தரசர்க்குநல்குரு, சஞ்-3:பாண்டவரிடம் தூது போனவன், சஞ்-4.
சதானிகன் -விராடனுடைய உறவினன்,படை-4.
சயத்திரதன் - சிந்துதேசத்தரசன்: ஸைந்தவன் எனப்படுவன்: இவன் துரியோதனனின் உடன்பிறந்தவளானதுச்சளையின் கணவன், சமரதத் தலைவன், அணி-19. சராசந்தன் -இடிபோன்றவன்: அவனுக்குஅஞ்சிக் கிருஷ்ணன் துவரையை அரணாகக்கொண்டுவடமதுரையைக்கைவிட்டனன், கிருட்-47.
சல்லியன் -மத்திரதேசத்தரசன்: படை-15:துரியோதனன் வஞ்சனையாக இட்டவிருந்தையுண்டு அவற்கே போர்த்துணைவனானான்,படை-16: சமரதத்தலைவர், அணி - 19. சாத்தகி - பலராமகிருஷ்ணர்க்குத் தம்பி,பலராமனைப் பழித்தவன், உலூக - 4: சமாதானங்கூடாது என்றவன், கிருட்-46,47.
சிகண்டி -அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்தவன்: வீடுமனை விண்ணுலகேற்றும் ஆற்றலுடையான், படை-3. சுவேதன் - விராடனதுமூத்த குமாரன்:தருமனால் சேனாபதி யாக்கப்பட்டவன், படை-12. பாண்டவ சேனைக்கு முகம் போன்றவன்,அணி-16.
தருமன் -முரசகேதனன், உலூக - 6:7:அறத்தின் மைந்தன், சஞ்:4:5:19: கிருட் - 219: சுகனை நிகர்ப்பவன், சஞ்-9:ராயசூயமகஞ்செயும் வீரமாமுனி, சஞ்-17: அறத்தின் உருவம்போல்வான், கிருட்-6: கோதிலான்,கிருட்-9: புகழேபூண்பான், கிருட்-18: பொறைவேந்தன், கிருட்-25: பாண்டவசேனைக்குமார்புபோன்றவன், அணி-16. திட்டகேது -திட்டத்துய்மன் மகன், படை -3.
திட்டத்துய்மன் -துருபதன் மகன்:திரௌபதியுடன் ஓமத்தீயினின்றும்தோன்றியவன்:துரோணனைக்கொல்லும் வன்மையுடையவன், படை-3. |