வர்த்தனன்-ஒரு கோடிகிராமம் ஆள்பவன்], கிருட்-103. பராசரன் - வியாசமுனிவரது தந்தை, சஞ்-9. பாண்டவர் - தலைகளைந்துபடைத்த பன்னகம் போன்றவர், ஒருவர் இறக்க மற்றையோரும் இறப்பர்: கிருட்-162: தனித்தனியே வஞ்சினங்கூறியவர், கிருட்-216: உண்மையினாலுயர்ந்தவர், கிருட்-218: கிருஷ்ணனுக்கு மைத்துனராவர், கிருட்-264: யாமளத்தின்படி காளி முன்னர் பகடாதியாக பலிகளீந்தனர், களப் - 8. பாண்டு - பஞ்சபாண்டவர்களின் தந்தை, உலூக - 10.
புரூரவன் - ஊர்வசியை அவுணர் கவர்ந்திட இந்திரன்பொருட்டு அவருடன் பொருது அவளைச் சிறைமீட்டவன், கிருட் - 28.
பூதனை - கண்ணனை முலையூட்டிக் கொல்லவந்த அலகை, சஞ்-1.
மகுடவர்த்தனன் - ஒருகோடி கிராமம் ஆள்பவன்: பட்டவர்த்தனனுக்குக் கீழ்ப்பட்டவன், கிருட்-103.
மந்தேகர் - மந்தேகாருணமென்னும் துவீபத்தில் வாழும் அரக்கர்: இவர்கள் செருக்கிச் சூரியனை வளைத்து எதிர்த்துப் போகவொட்டாது தடுத்துப் போர் செய்கின்றனர்: அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக் கையிலெடுத்து விடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடி செய்கின்றன: கிருட் - 86, 87.
வராககேது - விராடனுடைய உறவினன், படை - 4.
விகன்னன் - துரியோதனன் இறுதித்தம்பி: நீதிகளைநன்குணர்ந்து பேசுபவன்: கிருட் - 172, 174.
விதுரன் - பாண்டவர்பக்கல் மெய்யன்புடையவன், உலூக - 7. வில்லில்வல்லவன், உலூக 14. தத்துவஞான மிக்கவன், கிருட் - 75: ஞானகஞ்சுகம் உடையவன், கிருட் - 85: நீதிபுனைந்தவன், கிருட் - 106: கண்ணபிரான் தன்னில்லில் இரண்டுதினம் வைகுதற்கு எண்ணிலாத தவமெய்தினவன், கிருட் - 131. புரையில் கேள்விப்பயன் நுகர்மனத்தினன், கிருட் - 147: மா தவத்தின் மிக்கவன், கிருட் - 163. பலராமனுடன் தானும் தீர்த்தயாத்திரை சென்றவன், அணி - 5.
விராடன் - மச்சநாட்டார் கோமான்: சுவேதன், உத்தரன், இருவர்க்கும் தந்தை, படை - 4.
விருடசேனன் - கர்ணனது புத்திரருள் மூத்தவன், அணி- 20.
வீடுமன் - விந்தமன்னதோளான், உலூக - 9, கங்காபுத்திரன், உலூக - 17: வாசு-2: கிருட் - 74: இளையதாய் பயந்த இருதம்பியர்க்கு வாழ்வும் அரசும் கொடுத்தவன், கிருட் - 117: அசைவிலாதவன், கிருட் - 138: பரசுராமனிடம் வில்வித்தை கற்று அவனையே வென்றவன், துரியோதனனால் சேனாபதியாக்கப்பட்டவன், படை - 24: பண்ணளி நெருக்கொழிய மாதரிரு கண்ணளிபடாத மீளி, அணி-31.
வீமன் - துரியோதனனை அந்தரசரிதர் கொண்டேகாமல் வெஞ்சிறை மீட்டான், உலூக-18. மாருதி தம்பி, சஞ்-13: பவனகுமாரன், கிருட்-17, 219: குருகுலத்தோர் போரேறு, கிருட் - 17: பாண்டவசேனைக்குத் தோள் போன்றவன், அணி-16. |