மிக்கு வாசஸ்தாநமானதாமரை மலரிற்போல, (ஜசுவரியம் மிகுந்த தனது அரண்மனையில்) தனிப்பட்ட மந்திரிகளோடு ஆலோசித்தானென உரைத்தலுமாம். 'தொன்மதியமைச்சர்' என்றது, பலகாலமாகப் பலகாரியங்களில் மிகப்பழகி அனுபவமுடைய இயற்கையறிவோடுங் கூடின மந்திரிகளென்றபடி. துரோணகுடும்பத்திலிருந்துதோன்றினதனால், துரோணனென்று காரணப்பெயர். ஸரோருகம் - குளத்தில் முளைப்பது; தாமரைக்குக் காரணவிடுகுறிப் பெயர். புஜங்ககேது - வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; பாம்பைக்கொடியிலுடையவனென விரிக்க. புஜங்கம் என்பதற்கு - (கால்களில்லாமையால்) மார்பினாற் செல்வதென்றும், வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜமென்னும் தோளின்பெயர் - மார்புக்கு இலக்கணையாம்; புஜம் - வக்ரம். விரோசனன் - மிகுதியாகப் பிரகாசிப்பவனென்பது பற்றிச் சூரியனுக்குக் காரணக்குறி. அமைச்சர் - அருகிலிருப்பவரென்று பொருள்; அமா - அண்மை: இடைச்சொல். மந்திரிக்குத் தமிழில் 'உழையிருந்தான்', 'உழையன்' எனப் பெயர் வழங்கும். தூது - தூதனுக்குப் பண்பாகுபெயர். (23) பலதேயத்து அரசர்களை ஒருங்கேசேர்க்குமாறு தூதனுப்பிவிட்டுத் துரியோதனன் கிருஷ்ணனையழைக்கத் தானேசெல்லுதல். 3. | தேயமெங்கெங்குஞ்செங்கோல்செலுத்துமத்திகிரிவேந்த ராயவர்தம்மைக்கூட்டவடைவினிற்றூதுபோக்கிக் காயமுமுயிருமாகிப்பொருடொறுங்கலந்துநின்ற மாயவன்றன்னைக்கூட்டவளர்மதிற்றுவரைசேர்ந்தான். |
(இ -ள்.) (அங்ஙனம் ஆலோசித்தபின்பு துரியோதனன்), - தேயம்எங்கு எங்கும் - பூமியில் பலபல நாடுகளில், - செம்கோல் - நீதிதவறாத அரசாட்சியை, செலுத்தும் - நடத்துகின்ற, அ திகிரி வேந்தர் ஆயவர்தம்மை - பிரசித்தமான ஆஜ்ஞாசக்கரத்தையுடைய அரசர்களை, கூட்ட - (தனக்குப்படைத்துணையாகச்) சேர்ப்பதற்கு, அடைவினில் தூதுபோக்கி - முறையே தூதர்களை அனுப்பிவிட்டு, - காயமும் உயிரும் ஆகிபொருள்தொறும் கலந்துநின்ற மாயவன் தன்னை - எல்லாப்பிராணிகளினிடத்தும் வியாபித்துநின்ற மாயையுடைய ஸ்ரீ கிருஷ்ணபகவானை, கூட்ட - (தனக்குப்படைத்துணையாகச்) சேர்த்துக்கொள்வதற்கு, வளர்மதில் துவரை - ஓங்கின மதில்களையுடைய (அவனது) துவாரகாபுரியை, சேர்ந்தான் - அடைந்தான்; (எ - று.) மற்றையரசர்களைப்படைத்துணையாகச் சேர்த்துக்கொள்வதற்குத் தூதர்களை அனுப்பிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணபகவானைத் தனக்குப் படைத்துணையாக அழைப்பதற்குத் துரியோதனன் தானே துவாரகைக்குச் சென்றனனென்பதாம். இக் கவியில் 'போக்கி', 'சேர்ந்தான்' என்ற வினைகளுக்கும், கீழ்க்கவியிலுள்ள 'புயங்ககேது' என்பதே எழுவாய். 'காயமுமுயிருமாகிப் பொருள் |