பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 49

தன்னை - முடைநாற்றம் வீசுகின்ற முல்லைப்பூமாலையைச் சூடிய மயிர்
முடியையுடைய கண்ணபிரானை, 'போரில் படை எடாது ஒழிதி என்று -
யுத்தகளத்தில் (பாண்டவர் பக்கத்தில்) ஆயுதத்தையெடாமல் ஒழிவாயாக'
என்று சொல்லி, வேண்ட - பிரார்த்திக்க - நெடிய மா முகிலும் - பெரிய கரிய
மேகம் போன்ற கண்ணனும், நேர்ந்து - (அவ்வேண்டுகோளுக்கு) உடன்பட்டு
- (அருச்சுனனை நோக்கி), 'விசய - அருச்சுனனே! அடுபடை இன்றி -
கொல்லவல்ல ஆயுதத்தை யெடுத்தலில்லாமல், போரில் - யுத்தத்தில், நினக்கு -
உனக்கு, (உதவியாக), இனி செய்யும் - இனிமேல் (நான்) செய்யத்தக்க,
ஆண்மை - ஆண்தொழில், என் - யாது? அறைதி - கூறுவாய்' என்றான் -
என்று சொன்னான்; (எ - று.)

    'ஒழிமினென்று' எனப் பிரதிபேதம்.  முடைகமழ் என்ற அடைமொழி,
கண்ணனுக்கு உரியது; முடை - நெய்க்கந்தம்: இடையர்க்கு உரிய இதனை,
அவ்விடையர்சேரியில் வளர்ந்த கண்ணனது அடியார்க்கெளிமையை
[சௌலப்பியத்தை] விளக்கும்பொருட்டு அக்கண்ணனுக்கு அடைமொழியாகக்
கூறுதல், கவி மரபு; கண்ணன் திருவாய்ப்பாடியாகிய முல்லை நிலத்தில்
வளர்ந்தவனாதலாலும், அந்நிலத்துக்கு முல்லை உரியதாதலாலும்.  "மாயோன்
மேய காடுறை யுலகம்" என்றபடி அந்நிலத்துக்கு உரிய தெய்வம்
கண்ணனாதலாலும், 'முடைகமழ் முல்லைமாலை முடியவன்' என்றது.  பந்நகம்
என்பதற்கு - கால்களால் நடவாததென்றும்.  வளைவாகச்செல்வதென்றும்
பொருள்: நெடிய - முன்னே திரிவிக்கிரமாவதார காலத்தில் நீண்ட, அல்லது
பெருமைக் குணமுடைய என்றுங்கொள்ளலாம்.                  (35)

அருச்சுனனது உத்தரம்.

15.

செருமலியாழியங்கைச்செழுஞ்சுடர்நின்றென்றேரிற்
பொருபரிதூண்டினிந்தப்பூதலத்தரசரொன்றோ
வெருவருமியக்கர் விண்ணோர்விஞ்சையரெனினுமென்கை
வரிசிலைகுழையவாங்கிமணித்தலைதுமிப்பனென்றான்.

     (இ -ள்.) (அதற்கு அருச்சுனன்), 'செரு - போர்த் தொழிலில், மலி -
மிக்குவிளங்குகிற, ஆழி - சக்கராயுதத்தையேந்திய, அம் - அழகிய, கை -
வலத்திருக்கையையுடைய, செழுசுடர் - (எல்லா வொளிகளினுஞ்) சிறந்த ஒளி
வடிவமான எம்பெருமானே! (நீ), என் தேரில் நின்று - எனது இரதத்தின்மீது
(முன்புறத்தில்) எழுந்தருளி, பொரு பரி தூண்டின் - போர் செய்தற்கு உரிய
குதிரைகளைச் செலுத்தினால், இந்த பூதலத்து அரசர் ஒன்றோ - இந்த
நிலவுலகத்தினிடத்துள்ள (மனிதர்களான) அரசர்கள் மாத்திரமோ? (மற்றை
எவ்வுலகத்திலுமுள்ள), வெருவரும் - (கண்டவர்) 'அஞ்சத்தக்க, இயக்கர் -
யக்ஷர்களும், விண்ணோர் - தேவர்களும், விஞ்சையர் - வித்தியாதரர்களும்,
எனினும் - (எதிர்ப்பவர்) எவரானாலும், என் கை வரிசிலை - எனது
கையிலுள்ள கட்டமைந்தவில்லை, குழைய வாங்கி - வளையும்படி வளைத்து,
மணி தலை துமிப்பன் - (அவர்