துரியோதனன்போரிற் பாண்டவர்களை வெல்லமாட்டானென்று முன்னமே அறிந்துள்ளவனாதலால். எம்மைஎன்பதை உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக கொண்டு அதில் சாத்தகியை அடக்குதலுமொன்று: ஏ - பிரிநிலையாதவர் - யதுவின் சம்பந்தமானவர்; தத்திதாந்தநாமம்; யது என்பவன், சந்திரகுலத்திற் பிரசித்திபெற்ற ஓரரசன். முன் - முன்னமே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர். தாலகேது - பனைமரவடிவத்தைக் கொடியிலுடையவன்; 'பனந்துவசன் முசலி கருந்துகிலுடையவன் பலதேவன், பலபத்திரன் பேரே" என்பது நிகண்டு. வீடுமனுக்கும் பனைமரமே கொடியாதலால், இப்பெயர் அவனுக்கும் வழங்கும். தாலகேது - வேற்றுமைத்தொகையன்மொழி. மும்மை என்பது இங்கே மூன்றின் தன்மையைக்குறியாமல் மூன்றைக் குறித்ததனால், மை - பகுதிப்பொருள்விகுதி, தன்மைப்பொருள் விகுதி அன்று. மும்மை - மூன்று காலத்துச் செய்திக்கு இருமடியாகு பெயர். (38) துரியோதனன் பலராமனைக் காணுதல். 18. | கிருதவன்மாவக்குரோணிகிளர்படையோடுநின்பால் வருவனென்றுரைத்துவேண்டுமதுரவாய்மைகளுங்கூறி மருதுபோழ்ந்திட்டசெங்கண்மாயவன்விடுப்பவேகிக் கருதலான்வினயமொன்றுங்கண்ணன்முன்னோனைக்கண்டான். |
(இ -ள்.) மருது - இரட்டை மருதமரங்களை, போழ்ந்திட்ட - (இடையிலே உரலொடு புகுந்து) முறித்துத் தள்ளின, செம் கண் மாயவன் - சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான் - (துரியோதனனை நோக்கி) - 'கிருதவன்மா - (நமது) கிருதவர்மாவென்பவன், அக்குரோணி கிளர் படையோடு - ஒரு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள விளங்குகின்ற (நமது) சேனையுடனே, நின்பால் வருவன் - உன் பக்கத்தில் (படைத்துணையாக) வருவான்' என்று உரைத்து - என்று சொல்லி, வேண்டும் மதுரம் வாய்மைகளும்கூறி - (இன்னும் அச்சமயத்துக்கு) ஏற்ற இனிப்பான வார்த்தைகளையுஞ் சொல்லி, விடுப்ப - விடைகொடுத்தனுப்ப,- (துரியோதனன்), வினயம் ஒன்றும் கருதலான் - (அவ்வுதவியைப் பெறுதற்கேற்ற) வணக்கஞ் சிறிதையுஞ் செய்யநினையாதவனாய், ஏகி - சென்று, கண்ணன் முன்னோனை கண்டான் - ஸ்ரீகிருஷ்ணனது தமையனான பலராமனைப்பார்த்தான்;(எ-று.) இங்கும்,மதுரவாய்மைகள் கூறி என்றதனால், கண்ணனுக்குத் துரியோதனனிடம் இன்சொல்மாத்திரத்தால் அன்பேயன்றி மனப்பூர்வமான அன்பில்லை யென்பது விளங்கும். இதில்வர்மா என்பது - க்ஷத்திரிய சாதிக்கு உரிய பெயர்: (பிராமணர்க்குச் சர்மா என்றும், வைசியர்க்குக் குப்த என்றும், சூத்திரர்க்குத் தத்த அல்லது தாஸ என்றும் வழங்கும்.) கிருத |