22. | வாயுவடிக்கணைவாசவன்வைக்கணைவாருணமெய்க்கணைசெந் தீயின்வடிக்கணைதேவர்சுடர்க்கணைசேரவிடுத்தமையால் ஆயமுனைப்படுதேரணிபட்டனவாளணிபட்டனவெங் காய்கரிபட்டனபாய்பரிபட்டனகாவலர்பட்டனரே. |
(இ - ள்.) வாயு வடி கணை - வாயுவைத்தெய்வமாகவுடைய கூரிய அம்பையும் [வாயவ்யாஸ்திரத்தையும்], வாசவன் வைகணை - இந்திரனைத் தெய்வமாகவுடைய கூரிய அம்பையும் [ஐந்திராஸ்திரத்தையும்], வாருணம் மெய் கணை-வருணனைத்தெய்வமாகவுடைய உண்மையான [தவறுதலில்லாத] அம்பையும் [வாருணாஸ்திரத்தையும்], செம் தீயின் வடி கணை - சிவந்த அக்கினியைத் தெய்வமாகவுடைய கூரியஅம்பையும் [ஆக்நேயாஸ்திரத்தையும்], தேவர் சுடர் கணை- (மற்றும் பல) தேவர்களுக்குஉரிய ஒளியையுடைய அஸ்திரங்களையும், சேர -ஒருசேர, விடுத்தமையால் - (அருச்சுனன்) பிரயோகித்ததனால்.-ஆயம் - கூட்டமான,முனைபடு - போர்க்களத்தில் எதிர்ப்பட்ட, தேர் அணி - தேர்வரிசைகள், பட்டன-அழிந்தன: ஆள் அணி - காலாள்வரிசைகள், பட்டன-; வெம் காய் கரி - கொடியசீறுகிற யானைகள், பட்டன; பாய் பரி - பாய்ந்துசெல்லுந்தன்மையனவானகுதிரைகள், பட்டன-; காவலர் - (இந்நால்வகைச்சேனைக்கும்)அரசராகவுள்ளவர்களும், பட்டனர் - அழிந்தார்கள்;(எ- று.) வாருணம் - தத்திதாந்தநாமம். ஆய எனப் பிரித்தால், ஆகிய எனப்பொருள்படும். பி-ம்:- ஆயுமுனைப்படு. (131) 23.-அருச்சுனன் கடுமையாகப்பொரவே பகையரசர் அஞ்சியொளித்தமை. நாடியொ ளித்தனர் சூழ்புனன் மத்திர நாடன்மு தற்பலருங் கூடியொ ளித்தனர் மாரத ரிற்றிறல் கூரும்வ யப்படையோர் ஓடியொ ளித்தன ராடம ரிற்றுரி யோதன னுக்கிளையோர் வாடியொ ளித்தனர் மாகத ரொட்டியர் மாளவர் குச்சரரே. |
(இ - ள்.) (இன்னும் அப்பொழுது), ஆடு அமரில் - (அருச்சுனன்) செய்த போரில், புனல் சூழ் மத்திரநாடன் முதல் பலர்உம்-நீர்சூழ்ந்த மத்திரதேசத்தரசனான சல்லியன் முதலிய பல சமரதவீரர்களும், நாடி ஒளித்தனர் - (எதிர்த்தற்கு அஞ்சி) இடந்தேடி யொளித்துக்கொண்டார்கள்; மா ரதரில் திறல் கூரும் வய படையோர் - மகாரதவீரர்களில் வலிமைமிகுந்த வெற்றியைத்தரும் ஆயுத்ததையுடைய சோமதத்தன்முதலியோர், கூடி ஒளித்தனர் - ஒருங்குகூடி மறைந்தார்கள்; துரியோதனனுக்கு இளையோர் - (அர்த்தரதவீரரான) துரியோதனனது தம்பிமார், ஓடிஒளித்தனர்-; மாகதர் - மகததேசத்தாரும், ஒட்டியர்- ஓட்ரசேதத்தாரும், மாளவர்-மாளவதேசத்தாரும், குச்சரர் - கூர்ச்சரதேசத்தாரும் ஆகிய அரசவீரர்கள், வாடிஒளித்தனர் - வாட்டமுற்று ஒளித்தார்கள்; (எ - று.) |