மெய் தலை கால்கள் கரந்து - கையும் வாலும் உடம்பும் தலையும் கால்களும் மறைந்து, அ வாரணம் - அந்தயானை, வாரணம் ஆகியது - கோழிபோலச் சுருண்டது; (எ-று.) வாரணமாகியது என்பதற்கு - சங்குபோலாயிற்று என்று உரைப்பாருமுளர். "யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம்" என்ற திவாகரத்தை இங்கு அறிக. வாரணம் - கடலென்றுகொண்டு, எல்லா வுறுப்புக்களும் தெரிதலின்றிக் கருநிறமொன்றே தெரிதலால், இவ்வாறு கூறியதென உரைவகுத்தாரு முளர்: அது சிறவாதென்பது மேற்பாடலை நோக்கின் விளங்கும். வாகு - இங்கே கை; "தோளுற்றொர்தெய்வந் துணையாய்" என்ற சிந்தாமணியில், 'தோள்' என்பதுபோல. (149) 11. | கம்பித்தனகாருடல்பேருயிருங் கும்பித்தனவாயுகுமாரனிவ னம்பொற்கரபங்கயமள்ளுதலிற் றும்பிக்குலமாயினதும்பிகளே. |
(இ - ள்.) கார் உடல் கம்பித்தன - கரிய உடல் நடுங்கின வாகும்படியும், பேர்உயிர்உம் கும்பித்தன - பெரிய உயிரும் உள்ள டங்கினவாம்படியும், வாயு குமாரன்இவன்-வாயுவின்மகனான இவ்வீமன், அம் பொன்கரம் பங்கயம் அள்ளுதலின் -அழகிய பொன்னிறமான தன் கைகளாகிய தாமரைமலர்களில் எடுத்ததனால்,தும்பிகள் - யானைகள், தும்பி குலம் ஆயின-வண்டின் கூட்டமாயின; (எ - று.) "தும்பியே களிறு வண்டாம்" என்ற நிகண்டையுங் காண்க, கம்பித்தன. கும்பித்தன - வடசொல்லடியாப்பிறந்த பலவின்பால் முற்றேச்சங்கள்; கம்பம்- நடுக்கம்:கும்பித்தல்-ஒடுங்குதல், கரிய பெரிய யானைகள், கரியசிறிய வண்டுகள்போலஉடல்சுருங்கின என்க, யானையை வண்டென்பதற்கு ஏற்ப, வீமன்கையைத்தாமரைமல ரென்றார்: உருவகவணி, பி-ம்: தம்பித்தனகாருடல், 12. | பொன்னாகமணிப்புயன்வெங்கதையான் முன்னாகமலைந்துமுருக்குதலா லெந்நாகமுநாகமெனும்படியே மன்னாகவமெங்கும்மடிந்தனவே. |
(இ - ள்.) பொன் நாகம் மணி புயன் - பொன்மலையாகிய மகா மேருபோன்றஅழகிய தோள்களையுடைய வீமன், வெம் கதையால் - கொடிய (தனது)கதாயுதத்தால், முன் ஆக மலைந்து - எதிராகப் போர்செய்து, முருக்குதலால் -அழித்ததனால், எ நாகம்உம் - எல்லா யானைகளும், நாகம் எனும் படிஏ -மலைகளென்று உவமைசொல்லும்படி, மன் ஆகவம் எங்கும் - பெரிய போர்க்களம்முழுவதிலும், மடிந்தன - இறந்துவிழுந்துகிடந்தன; (எ-று.) "நாகம் விண் குரங்கு புன்னை நல்தூசு மலைபாம்பி யானை" என்பது நிகண்டு. பொன் ஆகம் எனப் பிரித்தால், அழகிய |