பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்117

அல்லது ஜயலக்ஷ்மிதங்குகிற மார்பென்னலாம். நாகம் - யானையைக்
குறிக்கும்பொழுது, மலையில் வாழ்வதென்றும் [நகம்-மலை]; மலையைக்
குறிக்கும்பொழுது, சலியாததென்றும் காரணங் காண்க.  பி-ம்: மின்னாக
மணிப்புயன்.                                          (151)
13.கோடுங்கரமும்பறியக்குதிகொண்
டோடுங்குருதிப்புனலூடுடல
மூடும்படியாவருமூழ்குதலா
லாடுங்கயமாயினவக்கயமே.

     (இ - ள்.) கோடுஉம் கரம்உம் பறிய - தந்தங்களுந் துதிக்கையும்
பிளந்தொழிய, குதிகொண்டு ஓடும் - (அப்பொழுது அந்தக் கொம்புங் கோடும்
பறியுண்ட இடத்தினின்று) பாய்ந்தோடுகின்ற, குருதி புனலூடு - இரத்த
வெள்ளத்தில்,உடலம் மூடும் படி யாவர்உம் மூழ்குதலால் - (தம்தம்) உடம்பு
மறையும்படி பலரும்மூழ்கவிருந்ததனால், அ கயம்- அவ்யானைகள், ஆடும்
கயம் ஆயின-நீராடுதற்குரியகுளங்களாயின;   (எ - று.)

     தந்தங்களுந் துதிக்கையும் பறியப் பாயும் இரத்தப்பெருக்குக்கு, கரைகளும்
மதகும் உடையப் பாயும் புதுநீர்வெள்ளம் உவமையாம், "குளமுமாழமு நீருங்
குறையுங், களிறும் பெருமையு மென்மையுங் கயமெனல்" என்பது பிங்கலந்தை,
கயம்- யானையைக் குறிக்கும்பொழுது, கஜமென்னும் வடமொழித் திரிபாம்,
புனலூடு. ஊடு- ஏழனுருபு, உடலம். அம்-சாரியை,                 (152)

14.வீசுந்தமகைம்முதன்மெய்ம்முழுதுங்
கூசும்படிசிற்சில்குழம்புகளாய்
மூசுங்களபக்குலமொய்ம்பனுடற்
பூசுங்களபக்களிபோன்றனவே.

     (இ - ள்.) மூசும் சில் சில் களபம் குலம்-நெருங்கிவருகிற சிலசில
யானைகளின்கூட்டம்,-கூசும்படி - (பார்ப்பவர்) அஞ்சும் படி, வீசும் தம கை
முதல் மெய்முழுதுஉம் குழம்புகள் ஆய் - முன்னேவீசுகிற தம்முடைய துதிக்கை
முதலாகஉடம்புமுழுவதுங் குழைசேறாகி, மொய்ம்பன் உடல் பூசும் களபம் களி
போன்றன -வலிமையையுடைய வீமசேனனது உடம்பில் பூசுதற்கு எதிர்வைத்த
கலவைச்சந்தனக்குழம்பை யொத்தன;

     "கலவையும் யானைக் கன்றுங் களபம்" என்றார் பிங்கலத்தையிலும். களபம்-
யானையைக்குறிக்கும்பொழுது, வடசொல்; பத்துப் பிராயத்து யானைக்கன்றுக்குப்
போதகமென்றும்,-முப்பதுபிராயத்து யானைக் கன்றுக்குக் களபமென்றும்
பெயர்கூறுதல், வடமொழிமரபு. கலவை- குங்குமப்பூ முதலிய
பலவகைவாசனைப்பண்டங்கள் கலக்கப்பெற்ற செந்நிறச்சாந்து. கலவை,
வெற்றிமகளை மணந்திடுதற் கென்க.                            (153)

15.

கிரியேயெனவந்தெதிர்கிட்டினபுன்
பொரியேயெனவானிடைபுக்கனபோ