பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்121

     (இ - ள்.) (இவ்வாறு வீமனுக்குத் துணையாக), மலரும்  குடை மன்னவர்
வந்தமை - பரந்துவிளங்கும் வெண்கொற்றக் குடையையுடைய பல அரசர்கள்
வந்ததை, கண்டு-, பலர்உம் கரி தேர் பரி ஆளுடனே - யானைவீரரும்
தேர்வீரரும்குதிரைவீரரும் காலாள் வீரரும் ஆகிய (நால்வகை) வீரர்
அநேகரோடும், புவிபாலர்சிலர் உம் - சில அரசர்களும், அலரும் கொடி வாள்
அரவோன் அருகுஏதிரண்டனர் - விரிந்துவிளங்கும் துவசத்திலே கொடியபாம்பின்
வடிவத்தையுடையதுரியோதனனது அருகிலே (உதவியாக வந்து) கூடினார்கள்;
(எ - று.)

     வாள் அரவு-வாள்போலஉக்கிரமான அர வென்க; இனி, ஒளியையுடைய
பாம்பெனினுமாம். மூன்றாமடியை, கரிதேர்பரி ஆள் பலருடனேயும் என
மொழிமாற்றுக. புவிபாலர் - பூமியைக் காப்பவர்.                     (161)

வேறு.

23.-இருபடையிலும் மன்னர் கடுமையாகப்பொருது ஆவியிழத்தல்.

எதிர்ந்தார் மன்ன ரிருதிறத்து மொருவர்க் கொருவ
                             ரிடையிடைநின்
றதிர்ந்தார் சிறுநாண் பேரொலியா லுடையா வல்ல
                               வகிலாண்ட
முதிர்ந்தார் போரிற் றொடுகணையான் முரட்டோ
                     டுணிந்து முடிதுணிந்தும்
உதிர்ந்தார் தத்த முடனிலத்தி லுயர்ந்தா ராவி
                              யுயர்வானில்,

     (இ - ள்,) இரு திறத்துஉம் - இரண்டுபக்கத்திலும், மன்னர் - பல அரசர்கள்,
ஒருவர்க்கு ஒருவர் எதிர்ந்தார் - ஒருவரோடு ஒருவர் எதிரிட்டார்கள்;  இடை
இடைநின்று - (அவ்யுத்தகளத்தின்) இடந்தோறும் பொருந்திநின்று, சிறு நாண்
அதிர்ந்தார்- சிறியவில் நாணியை(க் கைவிரலால் தெறித்து) ஒலிசெய்தார்கள்; 
பேர் ஒலியால் -அந்தப் பெரிய ஓசையினால், அகில அண்டம் உடையா அல்ல
- எல்லாவண்டங்களும் (மிகஅதிர்ந்து) உடைபடாதனவல்ல[யாவும் உடைபட்டன];்
(இன்னும்அவர்), தொடுகணையால் போரில் முதிர்ந்தார் - பிரயோகிக்கின்ற
அம்புகளால்போர்செய்தலில் மிக்கார்கள்; (பின்புபகைவர்படைக்கலங்களால்),
முரண் தோள்துணிந்துஉம்-வலிமையையுடையதோள்கள் அறுபட்டும், முடி
துணிந்துஉம்-தலையறுபட்டும், தம் தம் உடல் நிலத்தில் உதிர்ந்தார் - தம்தமது
உடம்பு தரையிலேசிதறப்பெற்றார்கள்; ஆவி உயர் வானில் உயர்ந்தார் - (தத்தம்)
உயிர் சிறந்தவீரசுவர்க்கத்தில் ஏறப்பெற்றார்கள் [இறந்தார்கள்]; (எ - று.)

     மன்னர் உடல் உதிர்ந்தார், ஆவி உயர்ந்தார் - திணைவழுவமைதி:
'பேரொலியாலுடையாவல்லவகிலாண்டம்' என்ற வாக்கியம், வில்நாணொலியைச்
சிறப்பித்துக்கூறவந்த இடைப்பிறவரல்.

     இதுமுதற் பத்துக் கவிகள் - கீழ்ச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.                      (162)

24.-வீமன் துரியோதனனுடையவில்முதலியனதுணியஎய்து நகைத்தல்.

தாமத்தெரியல்வலம்புரியோன்றடந்ததாமரைக்கைத்தனுத்தறியச்
சேமக்கவனப்பவனகதிப்பரிமாநான்குஞ்சிரந்துணிய