பக்கம் எண் :

130பாரதம்வீட்டும பருவம்

லொரும், கொலையுண்டார் - (இவர்களாற்) கொல்லப்பட்டார்கள்; வென்றார் -
(இவ்வாறு கடோற்கசனது பொய்ச்சேனையார் பகதத்தனது மெய்ச்சேனையாரைச்)
சயித்துவிட்டார்கள்; (எ-று.) - அன்றோ - தேற்றம்; இதில் - வியப்புந்தோன்றும்.
                                                            (175)

                    37.-சூரியாஸ்தமன வருணனை.

ஆனதானதாகவமெங்குமானைப்போர்
போனபோனமைந்தர்பிழைப்பீர்போமென்றென்
றூனமெய்தாதவ்விறைபோனானுயிரோடும்
போனகண்டகாய்கதிரோனும்புறமிட்டான்.

     (இ-ள்.) 'ஆகவம் எங்கும் - போர்க்களம் முழுவதிலும், ஆனை போர் -
யானைச்சண்டை, ஆனது ஆனது - மிகுதியாகஉண்டாயிற்று; போன போன
மைந்தர் - ஓடிப்போன வீரர்களெல்லோரும், பிழைப்பீர் - உயிர்வாழ்வீர்கள்;
(ஆதலால்), போம் - (தப்பி) ஓடிப்போங்கள்,' என்று என்று-என்று
பலமுறைச்சொல்லி, அ இறை - அந்த (ப் பகதத்த)ராசன், ஊனம் எய்தாது -
அழிவையடையாமல், உயிரோடுஉம் போனான் - உயிரோடும் (புறங்கொடுத்துச்)
சென்றான்; போன கண்ட - (அப்படிச்) சென்றதைப் பார்த்த, காய் கதிரோன்உம் -
சுடுகிற கிரணங்களையுடைய சூரியனும், புறம்இட்டான் - (தானும் கடோற்கசனது
யானைச்சேனைக்கு அஞ்சிப்) புறங்கொடுப்பவன்போல மறைந்துசென்றான்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி  மைந்தர் பிழைப்பீர். இடவழுவமைதி. போன=
போனது:விகாரம்.                                           (176)

38.-அப்போது இருதிறத்தாரும் பாசறை சேர்தல். 

பூந்தண்மாலைப்பஞ்சவரானைப்போர்வென்று
சேர்ந்தசேர்ந்தமன்னவரோடுந்திறலோடுந்
தாந்தம்பாடி வீடுபுகுந்தார்தரையாளும்
வேந்தனோடும்பாசறைபுக்கான்வீடும்மன்.

     (இ-ள்.) பூ - பூக்களாலமைந்த, தண் - (தேனினாற்) குளிர்ந்த, மாலை -
வெற்றிமாலையை யணிந்த,  பஞ்சவர் - பஞ்ச பாண்டவர்கள், ஆனை போர்
வென்று - அந்த  யானைப்போரில் சயித்து, சேர்ந்த சேர்ந்த மன்னவரோடுஉம் -
(தங்களோடு மிகுதியாக வந்து சேர்ந்த அரசர்களுடனும், திறலோடுஉம் -
வெற்றியுடனும், தாம் தம் பாடிவீடு புகுந்தார்-தாங்கள் தங்களது படைவீட்டை
யடைந்தார்கள்; வீடும்மன்-வீடுமன், தரை ஆளும் வேந்தனோடுஉம் - பூமியை
ஆளுகிற துரியோதனராசனுடனே, பாசறை புக்கான்-(தன்)படைவீட்டை யடைந்தான்;
(எ-று.)

     ஈற்று அடியால், துரியோதனாதியர் சேனையிலுள்ள மற்றையரசர்கள்
பலரும்பாண்டவர்சேனைக்குத் தோற்றுச் சிதறினரென்பது தொனிக்கும். வீடும்மன் -
விரித்தல்.                                                     (177)