காலாள் - பதாதிவகையோடு பதாதிவகையும், ஏலா - எதிர்த்து, தோலாது- தோல்வியடையாமல், அடலொடு சீறின-வலிமையோடு கோபித்துப்போர்செய்தன; (எ-று) உயர்திணைப்பெயர்களெல்லாம் சாதியுணர்த்துவனவாக வைத்து 'சீறின' என அஃறிணைப்பன்மைமுற்றுக் கொடுத்து முடித்தார். (199) 19.-இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு. நீடுங்கடகரியின்கரநிரையற்றனநதியா யோடுங்குருதியின்வாளைகளெனவோடினவொருசார் கோடுஞ்சிலையம்பிற்றலையரியுண்டனகுறைநின் றாடுந்தொறுமுடனாடுவவலகைக்குலமொருசார். |
(இ-ள்.) (அப்போர்க்களத்தில்), ஒரு சார் - ஒரு பக்கத்தில், நிரை அற்றன- வரிசையாக அறுந்துவிழுந்தனவான, கட கரியின் நீடும் கரம்-மதயானைகளின் நீண்ட துதிக்கைகள், நதி அய் ஓடும் குருதியின் - ஆறுகளாக விரைந்துபெருகுகிற இரத்தவெள்ளத்திலே, வாளைகள் என ஓடின-வாளைமீன்கள் போல ஓடின: ஒரு சார் - மற்றொருபக்கத்தில், கோடும் சிலை அம்பின் - வளைந்த வில்லினால் விடப்பட்ட (பகைவரது) பாணங்களால், தலை அரியுண்டன-தலை அறுபட்டனவான,குறை - உடற்குறைகள், நின்று ஆடும் தொறுஉம் - நின்று ஆடும்பொழுதெல்லாம்,அலகை குலம் - பேய்களின் கூட்டம், உடன் ஆடுவ- கூடநின்று கூத்தாடுவன;(எ-று.) முன்னிரண்டடி - வடிவுவமை. தலையரியுண்டன குறை-கபந்த மெனப்படும். தலைநீங்கியஉடல் முன்தொடர்ச்சியால் சிறிதுநேரம் கைகால்களை அசைத்துத் தொழில்செய்தலையும் பதைபதைத்துத் துடிப்பதையுமே. 'நின்று ஆடுதல்' என்றது: இனி, "பேரொத்த வாயிரம்பேர் மடிந்தாற்பிறக்குங்கவந்தம், நேரொத்தவாடும்" என்றபடி, ஒத்த ஆயிரம்வீரர் மடிந்தால் கவந்தமெழுந்து ஆடுமென்று கூறுதலுமுண்டு. கவந்தம் ஆடும்பொழுது பேய்கள் உடன் ஆடுவது, அவற்றைத் தாம் உண்ணலா மென்ற களிப்பினாலென்க. (200) 20. | கோல்கொண்டவைசிலைக்கொண்டவைவாள்கொண்டவைகூர்வாய் வேல்கொண்டவையவைதம்முடன்விழுகைத்தலமொருசார் கால்கொண்டுகுசெந்நீர்விரிகளமேககனமதா மால்கொண்டகரிக்கோடிளமதியாவனவொருசார். |
(இ - ள்) கோல் கொண்டவை-அம்புகளை எடுத்தவையும், சிலை கொண்டவை-வில்லைப் பிடித்தவையும், வாள் கொண்டவை- வாளையேந்தியவையும், கூர் வாய் வேல் கொண்டவை - கூரிய நுனியையுடைய வேலைத்தரித்தவையுமா யிருந்து, அவை தம்முடன்விழு - அவற்றுடனே அறுந்து கீழ்விழுந்த, கைத்தலம் - கைகள், ஒரு சார் - ஒருபக்கத்தில், (கிடந்தன); ஒரு சார் - ஒரு |