பக்கம் எண் :

ஐந்தாம் போர்ச்சருக்கம்147

யப்படும் ஓர் ஆயுதவிசேடம், இருபத்தையாயிரம்-இருபதினாற்பெருக்கிய
ஐயாயிரம்:லஷம் என்றாலும் ஒன்று.                       (203)

23.-சூரியாஸ்தமன வருணணை

இவ்வாறுமுனைந்தாருயிரிருசேனையுமடிய
மைவானுலகிடமற்றதுவயவீரர்நெருக்கா
லவ்வானவர்தமதாலயம்வலம்வந்தவருக்கன்
செவ்வானுறுகுடபால்வரையிடமென்றதுசேர்ந்தான்.

     (இ-ள்.) இ ஆறு - இப்படி, முனைத்து - போர்செய்து, இரு சேனைஉம் -
இருதிறத்துச் சேனைகளும், ஆர் உயிர் மடிய - அருமையான உயிர் நீங்க
[இறக்க],வய வீரர் நெருக்கால் - (உடனே வீரசுவர்க்க மடைந்த)
வலிமையையுடையஅவ்வீரர்களது நெருக்கத்தால், மை வான் உலகு இடம்
அற்றது - கரியஆகாசத்திலுள்ள சுவர்க்கலோகம் வெற்றிடம் (சிறிதும்)
இல்லையாயிற்று;(அப்பொழுது), அ வானவர் தமது ஆலயம் வலம்  வந்த
அருக்கன் - அந்தத்தேவர்களது இருப்பிடமான மேருமலையைப் பிரதஷிணமாகச்
சூழ்ந்துவந்த சூரியன்,செவ் வான் உறு குட பால் வரை இடம்என்று - செவ்வானம்
பொருந்திய (மேற்குத்திசையிலுள்ள) அஸ்தகிரியைத் தனக்கு இடமாக்கருதி, அது
சேர்ந்தான் -அம்மலையை அடைந்தான் [அஸ்தமித்தான்.]

     பூமியின் மத்தியிலுள்ள மேருமலையை வானத்திலே சுற்றி வருந்தன்மையுள்ள
சூரியன் இயல்பாக மறைந்ததை, தேவர்களுக்கு இருப்பிடமாகிய சுவர்க்கலோகமும்
மேருகிரியும் போரிலிறந்து விண்ணுலகடைந்த வீரர்களால் நெருங்கியிருப்பதைப்
பார்த்து அங்கு எங்குந் தனக்கு இடம்பெறாமல் மேற்குத்திசை மலையைத் தனியே
இடமாகக்கொண்டு சூரியன் சேர்ந்தாற்போலுமென உத்பிரேக்ஷித்தார்:
தற்குறிப்பேற்றவணி. வானத்துக்கு வடிவ மில்லையாயினும், 'மைவான்' என்பது -
தோற்றமாத்திரத்தைக் கொண்டு.                                 (204)

24.-இருதிறத்து மன்னவரும் பாசறைபுகுதல்.

எப்போதுமரும்போரினிலிதயங்களிகூர்வார்
கைப்போதுறுபடைசெம்புனல்வழியேயுயிர்காய்வா
ரொப்போதுதலரியாரிருதிறமன்னருமொருவா
வப்போதனிகத்தோடுமகன்பாசறைபுக்கார்.

     (இ-ள்.) ஏ போதுஉம் - எப்போழுதும், அரும் போரினில் - அருமையான
போர்செய்தலிலே, இதயம் களி கூர்வார் - மனங்களிப்பு மிகுபவரும், போது கை
உறு - தாமரைமலர்போன்ற (தங்கள்) கைகளிற் பொருந்திய, படை -
ஆயுதங்களால், செம்புனல் வழிஏ - இரத்தம் பெருகியவழியாகவே, உயிர் -
பகைவருயிரை, காய்வார் - கொல்லுபவரும், ஒப்பு ஓதுதல் அரியார் - (எவரையும்)
உவமை சொல்லுதற்குக் கூடாதவர்களும் ஆகிய, இரு திறம் மன்னர்உம் -
இரண்டுபக்கத்து அரசர்களும், அ