பக்கம் எண் :

160பாரதம்வீட்டும பருவம்

ஏவ-மிகப்பலவான அம்புகளையேவி எதிர்க்க, (அதனால் அவனது), மேல் ஆன
இரதம்உம்-சிறந்ததேரும், மாஉம்-தேர்க்குதிரைகளும், வலவன்உம் - தேர்ப்பாகனும்,
ஆழிகள்உம் - தேர்ச்சக்கரங்களும், உடன் அற்ற பின்-ஒரு சேர அழிந்தபின்பு,-
தான் - அவ்விகர்ணன், அ இரதம் உறாமல் - (அழிந்த) அத்தேரிற் பொருந்தாமல்,
விசையொடு தத்தி-வேகத்தோடு பாய்ந்து, அருகு உறு சித்திரசேனன் எனும்
இளையோனது அணி பெறு தேரின்மிசை-பக்கத்துப்பொருந்திய சித்திரசேனனெ்னும்
இளவீரனது அழகுபெற்ற தேரின்மேல், கடிது ஏறினான்-விரைவாக ஏறினான்;
(எ-று.)

     மூன்றாம் அடியில், அவிரதம்-அவ்விரதம் தம் என்பதன் தொகுத்தல்; இனி,
அவிரதம் என்றுபிரித்து-அந்த [தோல்விக்குஉரிய] ஓய்வை, உறாமல்-அடையாமல்
என்றும், அப்படிப்பட்ட பழிப்பைப் பெறாமல்என்றும் பொருள் கொள்ளலுமாம்;
விரதம் - ஒழிவு: விரஸம் - நிந்தை: வடசொற்கள் சித்ரஸேநன் - பலவகைச்
சேனையையுடையா னென்று காரணப்பொருள்; வடமொழிப்பெயர் - சித்திர
சேனனென்பவன் துரியோதனனுடைய தம்பியரில் ஒருவனென்பர் ஒருசாரார்.
மேல்ஆன - தான் மேலேறிய என்றுமாம். இளையோன் - (போரில்)
இளைப்படையாதவனுமாம்.                                  (226)

21.-பிறகு துரியோதனன்தம்பிமார் சயத்திரதன் பகதத்தன்
இவர்கள்பொர, இவர்களை அபிமன்யு அம்பினால் மொத்துதல்.

மற்றயிளைஞருமைத்துனனுமதமத்தகயபகதத்தனுஞ்
செற்றவிகனனுமுற்றுமிவனொடுசெற்றியமர்பொருகிற்றினார்
வெற்றியபிமனும்விற்கையுடனவர்விட்டகணைகள்விலக்கிமார்
பெற்றுகணையனைவர்க்குமவரவரெய்த்துவிழவிழமொத்தினான்.

     (இ-ள்.) மற்றை இளைஞர்உம்-(விகர்ண னொழிந்த) மற்றைத் துரியோதனன்
தம்பிமார் பலரும், மைத்துனன்உம் - இவர்களுடன் பிறந்தவளது கணவனான
சயத்திரதனும், மதம் மத்தம் கயம் பகதத்தன்உம் - மதத்தினாற் களித்துள்ள
யானைச்சேனையையுடைய பகதத்தனும், செற்றம் விகனன்உம்-கோபத்தையுடைய
விகர்ணனும், முற்றுஉம் - (ஆகிய) எல்லோரும், இவனோடு - இவ்வபிமனுடனே,
செற்றி அமர் பொருகிற்றினார்-நெருங்கிய போரைச் செய்தார்கள்; (அப்பொழுது),
வெற்றி அபிமன்உம் - சயத்தையுடைய அபிமந்யுவும், வில்கையுடன்-
வில்லைப்பிடித்த கையுடனே, அவர் விட்ட கணைகள் விலக்கி-அவர்கள்
(தன்மேல்)எய்த அம்புகளைத் (தான் எய்யும் அம்புகளால்) தடுத்து, (உடனே),
மார்பு எற்றுகணை-(பகைவர்) மார்பைத் தாக்கும் படியான அம்புகளை,
அனைவர்க்குஉம் -அவர்களெல்லோர்க்கும், அவர் அவர் எய்த்து விழ விழ -
அவரவர்கள் களைத்துமிகுதியாக விழும்படி, மொத்தினான்-செலுத்தினான்; (எ-று.)

     மதமத்தகஜபகதத்தன்-வடசொற்றொடர், கீழ்த்தனது தேர்க் குதிரை
சாரதிகளைஅழித்தது பற்றி, விகர்ணன் அபிமந்யுவினிடம்