ஏவ-மிகப்பலவான அம்புகளையேவி எதிர்க்க, (அதனால் அவனது), மேல் ஆன இரதம்உம்-சிறந்ததேரும், மாஉம்-தேர்க்குதிரைகளும், வலவன்உம் - தேர்ப்பாகனும், ஆழிகள்உம் - தேர்ச்சக்கரங்களும், உடன் அற்ற பின்-ஒரு சேர அழிந்தபின்பு,- தான் - அவ்விகர்ணன், அ இரதம் உறாமல் - (அழிந்த) அத்தேரிற் பொருந்தாமல், விசையொடு தத்தி-வேகத்தோடு பாய்ந்து, அருகு உறு சித்திரசேனன் எனும் இளையோனது அணி பெறு தேரின்மிசை-பக்கத்துப்பொருந்திய சித்திரசேனனெ்னும் இளவீரனது அழகுபெற்ற தேரின்மேல், கடிது ஏறினான்-விரைவாக ஏறினான்; (எ-று.) மூன்றாம் அடியில், அவிரதம்-அவ்விரதம் தம் என்பதன் தொகுத்தல்; இனி, அவிரதம் என்றுபிரித்து-அந்த [தோல்விக்குஉரிய] ஓய்வை, உறாமல்-அடையாமல் என்றும், அப்படிப்பட்ட பழிப்பைப் பெறாமல்என்றும் பொருள் கொள்ளலுமாம்; விரதம் - ஒழிவு: விரஸம் - நிந்தை: வடசொற்கள் சித்ரஸேநன் - பலவகைச் சேனையையுடையா னென்று காரணப்பொருள்; வடமொழிப்பெயர் - சித்திர சேனனென்பவன் துரியோதனனுடைய தம்பியரில் ஒருவனென்பர் ஒருசாரார். மேல்ஆன - தான் மேலேறிய என்றுமாம். இளையோன் - (போரில்) இளைப்படையாதவனுமாம். (226) 21.-பிறகு துரியோதனன்தம்பிமார் சயத்திரதன் பகதத்தன் இவர்கள்பொர, இவர்களை அபிமன்யு அம்பினால் மொத்துதல். மற்றயிளைஞருமைத்துனனுமதமத்தகயபகதத்தனுஞ் செற்றவிகனனுமுற்றுமிவனொடுசெற்றியமர்பொருகிற்றினார் வெற்றியபிமனும்விற்கையுடனவர்விட்டகணைகள்விலக்கிமார் பெற்றுகணையனைவர்க்குமவரவரெய்த்துவிழவிழமொத்தினான். |
(இ-ள்.) மற்றை இளைஞர்உம்-(விகர்ண னொழிந்த) மற்றைத் துரியோதனன் தம்பிமார் பலரும், மைத்துனன்உம் - இவர்களுடன் பிறந்தவளது கணவனான சயத்திரதனும், மதம் மத்தம் கயம் பகதத்தன்உம் - மதத்தினாற் களித்துள்ள யானைச்சேனையையுடைய பகதத்தனும், செற்றம் விகனன்உம்-கோபத்தையுடைய விகர்ணனும், முற்றுஉம் - (ஆகிய) எல்லோரும், இவனோடு - இவ்வபிமனுடனே, செற்றி அமர் பொருகிற்றினார்-நெருங்கிய போரைச் செய்தார்கள்; (அப்பொழுது), வெற்றி அபிமன்உம் - சயத்தையுடைய அபிமந்யுவும், வில்கையுடன்- வில்லைப்பிடித்த கையுடனே, அவர் விட்ட கணைகள் விலக்கி-அவர்கள் (தன்மேல்)எய்த அம்புகளைத் (தான் எய்யும் அம்புகளால்) தடுத்து, (உடனே), மார்பு எற்றுகணை-(பகைவர்) மார்பைத் தாக்கும் படியான அம்புகளை, அனைவர்க்குஉம் -அவர்களெல்லோர்க்கும், அவர் அவர் எய்த்து விழ விழ - அவரவர்கள் களைத்துமிகுதியாக விழும்படி, மொத்தினான்-செலுத்தினான்; (எ-று.) மதமத்தகஜபகதத்தன்-வடசொற்றொடர், கீழ்த்தனது தேர்க் குதிரை சாரதிகளைஅழித்தது பற்றி, விகர்ணன் அபிமந்யுவினிடம் |