பக்கம் எண் :

184பாரதம்வீட்டும பருவம்

     (இ-ள்.) ஐயா - ஐயனே! கால் வரு - காற்றுப்போல (வேகமாக) வருகிற,
கவனம் -நடையையுடைய, மான் - குதிரைகளைப் பூட்டிய, தேர் - தேரைச்
செலுத்தலில்வல்ல, கன்னன்உம் -  கர்ணனும், கன்னம்பாகம்-
கன்னங்களினிடத்திலே, மால் வரு - மிகுதியாகவழிகிற, கலுழி-கலங்கல்நீராகிய
மதசலத்தையுடைய, வேகம் - உக்கிரத்தன்மையுள்ள, மா - யானையைச்
செலுத்துதலில், வலான் - வல்லவனாகிய, சகுனிதான்உம்-, நூல் வரு பழுது இல்
கேள்வி - நூற்களிலே பொருந்திய குற்றமில்லாத கேள்விகளையுடைய, நும்பிஉம்
நீஉம் - உன்தம்பியான துச்சாதனனும் நீயும், இந்த நால்வர்உம் - இந்த நாலுபேரும்,
குறித்த - முன்பு எண்ணின, எண்ணம் - தீயசிந்தையின் பயன், நாளைஏ தெரியும் -
நாளைக்கே தெரிந்துவிடும்; (எ-று.)-நாளையே தெரியும் - விரைவிலே உங்களுக்கு
முழுவதும் அழிவுண்டாமென்றபடி.

     பெரியோர்கள் பலர் சாஸ்திரங்களிலுள்ள நீதிகளை எடுத்துச்
சொல்லக்கேட்டும் இயல்பான துர்க்குணத்தை விடாத இழிவு தோன்ற,
'நூல்வருபழுதில் கேள்வி நும்பியும் நீயும்' என்றார்; இனி, இகழ்ச்சியுமாம்.
முன்னிலையோடு படர்க்கையை உளப்படுத்தி முன்னிலையாக முடியாமல் 'நால்வர்'
எனப் படர்க்கையாற் குறித்தது. இடவழுவமைதி. வழாநிலையாயின், 'நால்விர்
எனநிற்கும். இவர்கள் குறித்த எண்ணம் - பாண்டவரைப் பலபடியாலும் கெடுத்தல்,
கால்வரு - கால்களாற் பாய்ந்துவருகிற என்றுமாம். இதைத் தேருக்கு அடைமொழி
யாக்கினால், சக்கரம்பொருந்திய என்று பொருள். 'தேர்கண்ணன்' என்றதில்,
கர்ணன்தேர்ப்பாகன்மகனென்ற இழிவும் தோன்றும். கன்னன்முதலியநால்வர்
துஷ்டசதுஷ்டரெனப்படுவர், நாளையே, ஏ - தேற்றம்.                 (257)

14.விதுரனும்வெஞ்சொலாற்றன்வில்லினையொடித்துநின்றான்
அதிரதனானாலன்றியங்கர்கோனமரில்வாரான்
முதிர்படைவிசயன்வீமன்மூண்டமர்புரியுங்காலை
யெதிரினிநானுநீயுமல்லதிங்கிலக்குவேறார்

     (இ-ள்.) விதுரனும்-, வெம் சொல் ஆற்றான் - (உனது) கடுஞ்சொல்லைப்
பொறுக்கமாட்டதவனாய், வில்லினை ஒடித்து நின்றான் - வில்லை யொடித்துப்
போய்நின்றான்; அங்கர் கோன்-கர்ணன், அதிரதன் ஆனால் அன்றி - (தன்னை)
அதிரதனாக வைக்காமற்போனால், அமரில் வாரான் - போரில் வரமாட்டான்: இனி
- இனிமேல், முதிர் படை - மிகப்பயின்ற ஆயுதங்களையுடைய, விசயன் வீமன் -
அருச்சுனனும் பீமனும், மூண்டு -  கோபத்தோடு வந்து, அமர் புரியும் காலை -
போர்செய்யும்பொழுது, எதிர் - (அவர்களை) எதிர்க்கவல்லவர், நான்உம் நீஉம்
அல்லது - நாம் இருவருமே யல்லாமல், இங்கு - இந்தப்பக்கத்தில், இலக்கு வேறு
ஆர் - (அவர்களுக்கு எதிர்க்கும்) குறியாய்நிற்பவர் வேறுயாவர்?
[எவருமில்லையேன்றபடி]; (எ-று.)

     அருச்சுனனையும் வீமனையும் ஒருங்கே எதிர்க்கும் வல்லமை
யுடையானென்று தன்னாற் கருதப்பட்ட விதுரனும், அவ்வாறே