பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்203

துச்சாசனனே! இ  மொழி - இந்தக் கர்ணண்வார்த்தையை, சென்று - (நீ) போய்,
கங்கை சுதனுக்கு உரைக்க - வீடுமனுக்குச் சொல்வாயாக,'  என-என்று சொல்ல,-
நஞ்சு ஆடு அராவை அனையான்உம் - விஷத்தையுடையதும் (படமெடுத்து)
ஆடுந் தன்மையதுமான பாம்பை யொத்த கொடிய அத்துச்சாசனனும், அங்கு -
அவ்வீடுமனுள்ளவிடத்தில், ஒர் நொடி உற்ற போழ்தின் - ஒரு நொடியளவு
பொருந்தினபொழுதிலே, நடவா - சென்று சேர்ந்து,-சாபம் மன்னும் -
விற்கள்பொருந்திய, அணி - அழகிய, எ யூகம் ஆன - எல்லாச்சேனைகளுமாகிய,
இரதந்தனக்கு - தேருக்கு, நடு - நடுவிலே, ஓர் அச்சு ஆணி ஆன - ஒரு
அச்சாணியையொத்த, அவனுக்கு - அவ்வீடுமனுக்கு, இவன் சொல் -
இந்தக்கர்ணனது வார்த்தையை, அடைவே புகன்றனன்-ஓழுங்காகச் சொன்னான்;
(எ-று.) -அரோ - ஈற்றசை. இது-கர்ணன் கூறியதை வீடுமனிடம் தெரிவிக்குமாறு
துரியோதனன் துச்சாதனனிடஞ் சொல்ல, அவன் அங்ஙனே கூறியதைத்
தெரிவிக்கும்.

     வியூகத்தையே இரதமாக உருவகஞ்செய்து, வீடுமனை அச்சாணியாக
உருவகஞ்செய்தார். அச்சு - சக்கரங்கோக்கும் மரம். ஆணி - அச்சக்கரம்கழலாமல்
அச்சின்நுனியில் செருகுவது. அந்த ஆணி தான் ஒன்றாய் ஓரிடத்திலிருந்து
கொண்டே மிகப் பெரிய தேர்முழுவதுக்கும் ஆதாரமாயிருத்தல் போல, வீடுமன்
தான் ஒருவனாய் ஓரிடத்திலிருந்து கொண்டே வில்முதலிய ஆயுதங்களையுடைய
பெரியசேனை முழுவதுக்கும் ஆதாரமாயிருந்து நடத்தும்
வலிமையையுடையவனென்க.                                  (289)

7.பேரன்புகன்றமொழிகேள்விசெய்துபெரியோன்முகிழ்த்துநகையா
வீரம்புகன்றெனினிநானுமக்குவிசயற்செறுத்தன்முடியா
தீரந்துறந்தவொருநூறுபேரைமகுடத்துணிப்பலெனவே
நேரன்றமர்க்கணுரைசெய்தவாய்மைநிறைவேறுநாளையுடனே.

இதுமுதல் எட்டுக்கவிகள் - குளகம்.

     (இ-ள்.) பேரன் புகன்றமொழி-பௌத்திரனான துச்சாசனன்
சொன்னவார்த்தையை கேள்வி செய்து - கேட்டலைச்செய்து (கேட்டு), பெரியோன்
- பெரியபாட்டனான வீடுமன், முகிழ்த்து நகையா-சிறிதாகக்சிரித்து [புன்சிரிப்புச்
செய்து], 'இனி - இப்பொழுது, நான்-, உமக்கு - உங்களுக்கு, வீரம் புகன்று-
வீரவாதமானவார்த்தையைச் சொல்லுதலால், என் - என்னபயன்? விசயன்
செறுத்தல் - அருச்சுனனைக் கொல்லுதல், முடியாது - (எவர்க்கும் எப்பொழுதும்)
ஆகாது; ஈரம் துறந்த - (மனத்தில்) இரக்கமில்லாத, ஒரு நூறு பேரை -
(துரியோதனாதியர்) நூற்றுவரையும், இனி-, மகுடம் துணிப்பல் -
தலையறுத்திடுவேன், என-என்று, நேர் - (யாவர்க்கும்) எதிரிலே, அன்று-
(திரௌபதியைத் துகிலுரிந்த) அக்காலத்தில் உரை செய்த - (வீமன்)சொன்ன,
வாய்மை-சபதவார்த்தையும், நாளை உடனே-இனி விரைவிலேயே, அமர்க்கண்-
போரில், நிறைவேறும் - தவறாமல் நடந்துவிடும்;(எ-று.)-இப்பாட்டில், 'நகையா'
என்பது, "குன்றுவிடைநல்கி"