பக்கம் எண் :

206பாரதம்வீட்டும பருவம்

11.- மூன்றுகவிகள்-யுதிட்டிரன்பக்கத்தார் போர்க்களங்குறுகி
அணிவகுத்துநின்றமை கூறும்.

நின்றானமர்க்கணவரங்குநிற்கவிவரிங்குநென்னனிருதன்
கொன்றானெனத்தன்மதலைக்கொரெண்மரெழுவோரைநீடுகொலைசெய்
தொன்றாகமன்னர்பலராவிகொண்டவுரவோனுமும்பர்பகைபோய்
வென்றானுமற்றையிளையோருமொன்றின்விரகற்றகோவுமுதலோர்.

     (இ-ள்.) அமர்க்கண் நின்றான் - போர்க்களத்தில் நின்றிட்டான்; அவர்
அங்குநிற்க - அந்தத்துரியோதனன் பக்கத்தவர்கள் அவ்வாறுநிற்க,-இங்கு -
இப்பக்கத்தில்,கென்னல்-நேற்று, நிருதன்-(அலம்புசனென்னும்) இராக்கதன்,
கொன்றான் என-(இராவானைக்) கொன்றிட்டா னென்று, தன் மதலைக்கு - தனது
(தம்பியின்)மகனான இராவானுக்காக (இரங்கி), (அதற்குஈடாக), ஒர் எண்மர்
எழுவோரை (துரியோதனன் தம்பிமார்களுள்) ஒருஎட்டுப்பேரையும் (மற்றும்)
ஏழுபேரையும், நீடுகொலை செய்து-பெருங்கொலைசெய்து [ஒருங்கே அழித்து],
ஒன்று ஆக -(அவர்களோடு) ஒருசேர, மன்னர் பலர் ஆவி கொண்ட-(மற்றும்)
பலஅரசர்களதுஉயிரைக் கவர்ந்த, உரவோன்உம்-வலிமையையுடைய வீமனும்,
உம்பர் பகை -தேவர்களுக்குப் பகைவரான நிவாதகவசகாலகேயர்களை, போய்
வென்றான்உம் -சென்று சயித்த அருச்சுனனும், மற்றை இளையோர்உம் -
மற்றைத்தம்பியரான நகுலசகதேவரும், ஒன்றின் விரகு அற்ற - ஒருவகையிலும்
வஞ்சனையில்லாத, கோஉம் -தலைவனான தருமனும், முதலோர் -
முதலியவர்களாகிய. இவர் -இந்தப்பக்கத்தார்,- (எ - று.) -"களத்தினிடைவந்து"
என வருங் கவியோடுதொடரும்.

     ஒன்றின்விரகற்ற - மனம் மொழி மெய் என்னுந்திரிகரணங்களின் சிந்தை
சொல் செயல் என்னும் மூவகைத்தொழிலிலும் வஞ்சனையில்லாத.       (294)

12.மற்றுள்ளமன்னர்புடைபோதமுன்னர்மழைமேனிமாயன்வரவே
உற்றுள்ளவீரரொடுசேனைநாதனணிநிற்கவொண்கொயுளைமா
முற்றுள்ளவெங்குமெழுபூழிதுள்ளளமுரசங்கடுள்ளமிகவுஞ்
செற்றுள்ளமேவுகனறுள்ளவந்துசெருவெங்களத்தினிடையே.

     (இ-ள்.) மற்று உள்ள மன்னர் - மற்றுமுள்ள அரசர்கள் பலர், புடை
போத -பக்கங்களில் வரவும், மழை மேனி மாயன்-நீல மேகம் போலுந்
திருமேனியையுடைய கண்ணன், முன்னர்வர - முன்னேசெல்லவும், உற்றுள்ள
வீரரொடு - கூடப்பொருந்தியுள்ள வீரர்களுடனே, சேனை நாதன் - (தன்)
சேனைத்தலைவனான திட்டத்துய்மன், அணி நிற்க - படை வகுப்பின் முன்னே
நிற்கவும், ஒள்கொய் உளை மா - பிரகாசமான கத்திரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய
குதிரைகள், முன் துள்ள-முன்னேகுதித்துச் செல்லவும், எழு பூழி - மேலேழுகிற
புழுதி, எங்கும் துள்ள - எல்லாவிடத்தும் பரவவும், முரசங்கள்-யுத்தபேரிகைகள்,
மிகஉம் துள்ள-மிகுதியாக ஒலிக்கவும், செற்று உள்ளம் மேவு கனல்-கோபித்து
மனத்