வேறு. 14.-வீமனுடன்பொர அலம்புசன் வருதல். இந்திரனு மேனையிமை யோர்களு நடுங்க வந்தரமு மெண்டிசையு நின்றதிர வதிரா வெந்திறல லங்கல்புனை வீமனுடன் மலைவான் வந்தனன லம்புசன் லம்புனைபு யத்தான். |
(இ-ள்.) வலம் புனை புயத்தான்-பலத்தைக்கொண்ட தோள்களையுடையவனாகிய, அலம்புசன்-அலம்புசனென்னும் அரக்கன்,- இந்திரன்உம் ஏனை இமையோர்கள்உம் நடுங்க - தேவேந்திரனும் மற்றைத்தேவர்களும், நடுக்கமடையவும், அந்தரம்உம் எண் திசை உம் நின்று அதிர-மேலுலகமும் எட்டுத்திக்குக்களும்மிக அதிர்ச்சி பெறவும், அதிரா- கர்ச்சனைசெய்துகொண்டு, வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்- கொடியபோருக்கு (அடையாளமாகத் தும்பைப்பூ) மாலை சூடிய வீமனுடனே போர்செய்வதற்கு, வந்தனன்-,(எ - று.)-வலம் - வடசொல் திரிபு. இதுமுதல் பதினைந்து கவிகள்-கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் ஐம்பதாங்கவி போன்ற கலிவிருத்தங்கள். (297) 15.-அலம்புசன்வருவதுகண்டு வீமன் தேரினின்று இறங்கி அவ்வரக்கனெதிரே யோடுதல். செருவில்வெருவாநிருதசேகரன்வயப்போர் மருவுசுடர்வாளினுடன்வந்தநிலைகாணா விரவிவருதேரனையதேரின்மிசையிழியா வுருமுருமெனாவிரைவினோடியெதிர்வந்தான். |
(இ-ள்.) செருவில் வெருவா - போரில் அஞ்சாத, நிருதசேகரன் - அரக்கர்களுக்குமுடியணிபோலச்சிறந்தவனான அலம்புசன், வய போர் மருவு- வலியபோரைச்செய்தற்குப்பெருந்திய, சுடர் வாளினுடன் - ஒளியையுடைய வாளாயுதத்துடனே,வந்த- (தன்னையெதிர்த்து) வந்த, நிலை-நிலைமையை, காணா- பார்த்து,-(வீமன்)இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா-சூரியன் வருகிற தேரையொத்த(தன்) தேரின் மேல் நின்றுஇறங்கி, உரும் உரும் எனா-(காண்பவர்) இடி இடிஎன்றுசொல்லும்படி, விரைவின் எதிர் ஓடிவந்தான் - வேகமா (அவ்வரக்கனது)எதிரில்ஓடிவந்தான்;(எ-று.)-அடுக்கு-அச்சம்பற்றியது - இரவிவருதேர்தடைப்படாதுவிரைந்துசெல்லுதற்கு உவமை. (298) 16.-வீமன் அலம்புசனுடைய ஒருதோளைத் துணித்தல் யாளியொரிரண்டிகல்புரிந்ததெனவிகலா மீளிமையினாலும்வலியாலும்விறன்மிக்கோன் வாளின்மிசைவாளதனைவைத்தடலரக்கன் றோளிலொருதோணிலனுறும்படிதுணித்தான். |
|