பக்கம் எண் :

212பாரதம்வீட்டும பருவம்

     மந்தரமும் மந்தரமு மென்ன - இல்பொருளுவமை; இருவரும் வலிமையில்
ஒத்தவரென்பதை விளக்கும். இதல்ல - ஒருமைப்பன்மைமயக்கம். இது அந்தரமல்ல
என - இந்தப்பூமி(நாம் போர் செய்தற்கு ஏற்ற) இடமல்லவென்று எண்ணி
எனினுமாம். சுந்தரம்-நீரைத்தரிப்பது: மேகம்: வடசொல். இனி, சுந்தரம் -
குகையுமாம். பி - ம்: எடுத்துச்.                                 (305)

 
23.எறியுமளவிற்குரிசிலிளவறிருமைந்தன்
குறியினொடுவெஞ்சிலைகுனித்தருகுநின்றான்
பொறியிலவன்வீசியபொருப்பொரணுவாகி
முறியும்வகைபல்பகழிமுகிலெனவிடுத்தான்.

     (இ-ள்.) எறியும் அளவில்-(அரக்க) மலையை வீமன்தோளில்) வீசிய
அளவில்,-குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் - (வீமனுக்குத்
துணைசெய்யுங்) கருத்தோடு கொடியவில்லைவளைத்து அவனருகில் நின்றவனாகிய,
குரிசில் இளவல் திரு மைந்தன் - அவ்வீமராசனது தம்பியான அருச்சுனனது சிறந்த
புத்திரனான அபிமந்யு, பொறியில் அவன் வீசிய பொருப்பு ஓர் அணு ஆகி முறியும்
வகை-(வீமனது) தோளில் அவ்வரக்கன் எறிந்த அந்தமலை ஒரு சிறுபொடியாய்
அழியும்படி, பல் பகழி-பல அம்புகளை, முகில் என- மேகம் (மழைபொழிவது)
போல, விடுத்தான் - செலுத்தினான்; (எ-று.)

    குறியினொடு - இலக்கை எதிர்நோக்கி என்னவுமாம். பொறி இலவன்
எனஎடுத்து,(ஒருதோளாகிய) உறுப்பில்லாதவ னென்றும், அறிவற்றவனென்றும்,
(இனிவாழும்,விதிஇல்லாதவனென்றும் கொள்ளினுமாம்.                (306)

24.வில்லபிமன்வெங்கணைகள்விசையொடவனெறியுங்
கல்லசலநீறுபடுவித்ததிறல்கண்டே
கொல்லவினிவேண்டுமெனவெய்யதொருகூர்வேல்
வல்லடலரக்கனகன்மார்பின்மிசைவிட்டான்.

     (இ-ள்.) வில் அபிமன் வெம் கணைகள்-விற்போரில்வல்ல அபிமனது
வெவ்விய அம்புகள், விசையொடு-வேகத்தோடு, அவன் எறியும் கல் அகலம் நீறு
படுவித்த - அவ்விராக்கதன்(தன்மேல்) வீசின கல்மலையைப் பொடிபடச்செய்த,
திறல்-வல்லமையை, கண்டு - பார்த்து,- (வீமன்), இனி கொல்லவேண்டும் என-'இனி
இவ்வரக்கனைக் கொன்றுவிடவேண்டும்' என்று கருதி, வெய்யது ஒரு கூர் வேல் -
கொடியதொரு கூர்மையையுடைய வேலாயுதத்தை, வல் அடல் அரக்கன் அகல்
மார்பின்மிசை விட்டான்-மிகுந்தவலிமையையுடைய அலம்புசனது பரந்த
மார்பின்மேல் எறிந்தான்;(எ-று.)

     அசலத்திற்குக் கல்என்ற அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது. அதன்
உறுதியைக் குறிக்கும். வல் அடல் - ஒரு பொருட்பன்மொழி, விட்டான் என்பதற்கு
- (வீமன்) தோன்றா எழுவாயாதலை, மேல்27 - ஆம் பாட்டால் அறிக. விசையொடு