சொற்பகலிலானிளவலசென்றனர்துதித்தார் அற்பகலிலாவுலகில்வாழமரரெல்லாம். |
(இ-ள்.) (அப்பொழுது), அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் - (இவ்வுலகிற்போல) இராத்திரியும் பகலுமில்லாத சுவர்க்கலோகத்தில் வாழ்கிற தேவர்கள் யாவரும், 'முன் பகலில்-முந்தினநாளிலே, மைந்தனை - அருச்சுனன் மகனான இராவானை, முருக்கிய-கொன்ற, அரக்கன்-அலம்புசன், பின்பகலில்- அடுத்தநாளிலே, வீழ-இறந்துவிழும்படி, சொல் பகல் இலான் இளவல்-(சொன்ன) சொல் மாறுதலில்லாத தருமனுக்குத் தம்பியான் வீமன், வடிவேல் கொடு பிளந்தான் - கூர்மையான வேலாயுதத்தால் (அவனைப்) பிளந்திட்டான்,' என்றனர் - என்று சொல்லி, துதித்தார்-(வைரந்தீர்த்த வீமனது திறமையைக்) கொண்டாடினார்கள்;(எ-று.) சூரியனது உதய அஸ்தமனங்களாலாகிய பகல் இரவு என்னும் காலவேறுபாடுகள் அச்சூரியமண்டலத்துக்கு மிகமேலுள்ள தேவலோகத்தில் இல்லையாதலால், 'அற்பகலிலா வுலகு' எனப்பட்டது. மூன்றாமடியில், பகல்-பகுதல்: தொழிற்பெயர்: பகு - பகுதி, அல் - விகுதி. முற்பகல், பிற்பகல் என்பன-இங்கே, ஒருபகலின் முன்பின்பகுதியை உணர்த்துவன அல்ல: "முற்பகல் செய்தான் பிற்பகல் தன்கேடு, பிறன்கேடு தன்கேடு பிற்பகற்கண்டுவிடும்" என்ற திருக்குறள் இங்குக் காணத்தக்கது (310). 28.-அருச்சுனன்பாற் பல மன்னர் மடிதல். காசியர்கள் சேதியர்கண் மாளவர்க லிங்கர் பூசலிடை யேழுபதி னாயிரவர் பொங்கிக் கேசவ னடாவுகிளர் தேர்கெழு சுவேத வாசியுடை யான்விசயன் வாளியின்ம டிந்தார். |
(இ-ள்.) காசியர்கள் - காசிநகரத்தாரும், சேதியர்கள்- சேதிநாட்டாரும், மாளவர் - மாளவதேசத்தவரும், கலிங்கர்-கலிங்க நாட்டவரும் ஆகிய, ஏழு பதினாயிரவர் - ஏழு பதினாயிரம்பேர், பூசலிடை - போரிலே, பொங்கி - உக்கிரமாகஇருந்து (கடும்போர்செய்து),-கேசவன் நடாவு-கண்ணன் செலுத்துகிற, கிளர்தேர்-விளங்குகிற தேரில், கெழு-பொருந்திய, சுவேதவாசி உடையான்- வெள்ளைக்குதிரைகளையுடையவனாகிய, விசயன் - அருச்சுனனது. வாளியின் - அம்புகளால், மடிந்தார் - இறந்தார்கள்: (எ-று.) நான்குவெள்ளைக்குதிரைகள் பூட்டியதொரு சிறந்ததேர், அக்கினிதேவனால் அருச்சுனனுக்குக் காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது: இவ்வெள்ளைப்பரிகளை யுடைமையால், 'சுவேத வாகநன்' என்று அருச்சுனனுக்கு ஒருபெயர். ஸ்வேதவாஜு - வட மொழித்தொடர். கெழு-சாரியையுமாம். (311) |