பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்219

கருத்து, கருங்கடல் குருதியாற் சிவந்தது என்பது, பின்வாக்கியத்தின் கருத்து:
பிறிதின்குணம்பெறலணி, பங்கேருஹம் - சேற்றில் முளைப்பது; வடசொல்:
தாமரைக்குக் காரணவிடுகுறி. தேமாலை- (நன்-மெய்,கக) நீத்தம்-நீந்தப்படுவது.
                                                          (318)

           36.-மூன்றுகவிகள் - வீடுமன் கடும்போர்புரியச்
         சதாநீகன் வந்தெதிர்த்து உயிரொழிந்தமை கூறும்.

மன்னுஞ்சேனைபடக்கண்டவாட்சந்தனுவின்றிருமைந்தன்
பின்னுந்தனதுசிலையேந்திப்பேணாரெவரும்பின்காட்டத்
துன்னும்பகழிமழைபொழிந்துதுரக்கும்பொழுதுவிராடபதி
என்னுங்குரிசிறனக்கிளையோனிராமற்கிளையோனெனத்
                                    தக்கோன்.

     (இ-ள்.) மன்னும் - நிலைபெற்ற, சேனை - (தம்பக்கத்துச்) சேனை, பட-
(அருச்சுனனால்) அழிய, கண்ட-, வாள் சந்தனுவின் திருமைந்தன் -
ஆயுதப்பயிற்சியில் வல்ல சந்தனுமகாராசனது சிறந்தபுத்திரனான  வீடுமன்,-பின்உம்
தனது சிலை ஏந்திமீண்டும் தன்னுடைய வில்லை வளைத்து, பேணார் எவர்உம்
பின்காட்ட - பகைவர்கள்எல்லோரும் புறங்காட்டி அழியும்படி, துன்னும் பகழி
மழை பொழிந்து -  நெருங்கிய அம்புமழையைச் சொரிந்து, துரக்கும் பொழுது -
(எதிர்ப்பக்கத்துச் சேனையை) ஓட்டுகிற  சமயத்தில், விராடபதி என்னும் குரிசில்
தனக்கு இளையோன் - விராடதேசத்தரசனென்கிற வீரனுக்குத் தம்பியும், இராமற்கு
இளையோன் என தக்கோன் - இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குமண னென்று
சொல்லத்தக்கவனும்,-(எ-று.)- (ஆகிய) "சதானிகன்" என அடுத்த கவியோடு
தொடரும்,

     சிகண்டி எதிரில் வந்தபொழுது, வீடுமன் தன்கைவில்லைக்கீழ் எறிந்ததனாலே,
'பின்னுந் தனது சிலை யேந்தி' என்றார். இலக்குமணன்-போர்த்திறத்துக்கும்,
தமையனுக்குக் கீழ்ப்படிந்திருக்குந் தகுதிக்கும் உவமை.                  (319)

37.பண்ணும்பரிமான்றேருடையான்படைத்தேர்மன்னர்பலர்சூழ
வெண்ணுஞ்சிலைக்கைச்சதானிகன்வந்தேதிரூன்றுதலு
                                    மெண்டிசையு
மண்ணுந்திகைக்கும்படிமலைந்தான்மன்பேருயிருக்காருயிருங்
கண்ணும்போல்வான்கருதலர்க்குக்கடுங்காலெழுப்புங்கனல்
                                   போல்வான்.

     (இ-ள்.) பண்ணும்-அலங்கரிக்கப்பட்ட, பரி மான் - குதிரைகளைப் பூட்டிய,
தேர் உடையான்- இரதத்தையுடையவனும் ஆகிய, எண்ணும் சிலை கை
சதானிகன்-(யாவரும்) நன்குமதிக்கும் வில்லையேந்திய கையையுடைய
சதாநீகனென்பவன், படை தேர் மன்னர் பலர் சூழ- சேனைகளையுடைய
ரதாதிபதிகளான அரசர்கள்பலர்(தன்னுடன்)சூழ்ந்துவர, எதிர் வந்து ஊன்றுதலும் -
வீடுமனெதிரில் வந்து(போருக்கு) நின்றவளவில்,-மன் பேர் உயிருக்கு-(உலகத்தில்)
நிலைபெற்ற மிகுந்த பிராணிகளுக்கெல்லாம், ஆர் உயிர்உம்