பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்227

தைக் கங்கைக்கு அடைமொழியாக்கினால், பகீரதன் கங்கை கொணர்ந்த
சரித்திரத்தையும், மைந்தனுக்கு அடைமொழியாக்கினால் சாபத்தால பிரபாசவசு
பீஷ்மனான வரலாற்றையும் குறிக்கும். யாநம் - வாகனம்; வடசொல்.     (331)

8.-அருச்சுனன்சிறப்பு. 

போரினண்டர்பகையைமுன்புபொருதுவென்றவின்மையான்
மூரிவெங்கொடிக்குரங்குமுன்னடக்குமேன்மையான்
வாரிதங்கொண்மேனியான்வனம்புகுந்துவருதலான்   
யாருமின்றிராமனென்னவிசையநின்றவிசயனே.

     (இ-ள்.) முன்பு - முன்னொருகாலத்தில், அண்டர் பகையை-
தேவர்களுக்குப்பகைவர்களை, போரின் பொருது - யுத்தத்தில் தாக்கி,
வென்ற - சயித்த,வின்மையான்-வில்லின் திறத்தாலும், முன் - (தனதுதேரின்)
முன்னிடத்தில், மூரிவெம் கொடி-வலிமையுடைய பயங்கரமான துவசத்தில்,
குரங்கு நடக்கும் -அனுமான் பொருந்திய, மேன்மையான் - பெருமையாலும்,-
வாரிதம் கொள் -மேகத்தையொத்த, மேனியான் - திருமேனியினாலும்,-வனம்
புகுந்து வருதலான் -காட்டிற்சேர்ந்து (வசித்து) வந்ததனாலும், யார்உம் இன்று
இராமன் என்ன -யாவரும் இக்காலத்தில் (இவன்) இராமபிரான் என்று
சொல்லுதற்கு, இசைய நின்ற -ஏற்றபடி நின்ற, விசயன் - அருச்சுனன்,- (எ-று.)-
"என்றபோது'' என மேற்பதினோராங்கவியோடு இயையும்.

     விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமமூர்த்திக்கும் அருச்சுனனுக்கும் சில
ஒற்றுமைநயங்காட்டி உவமைகூறினார். இராமனுக்கு, அண்டர்பகையை  வெல்லுதல்-
இராவணாதி இராக்கதரை அழித்தல்; அருச்சுனனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல்
- நிவாதகவசகாலகேயர்களை வதைத்தல். அனுமக் கொடியும், நீலமேனியும்-
இருவர்க்கும் உண்டு, இராமனுக்கு வனம்புகுதல்-பதினான்குவருஷமும்,
அருச்சுனனுக்கு வனம்புகுதல்-பன்னிரண்டு வருஷமுமாம்; இனி, இரண்டாமடிக்கு -
இராமனுக்கு ஆகும்பொழுது, வலிய கொடிய நீண்ட குரங்கின்சேனை
முன்னேசெல்லப்பெற்ற பெருமையால் என்று உரைப்பினும் அமையும்; கொடி -
நீளம். வாரிதம் - வடசொல்;  நீரைக் கொடுப்ப தென்று பொருள்.        (332)

9.-இரண்டுகவிகள்-வீரவாதமாக அருச்சுனன் கண்ணனோடு கூறுவன.

சிலைபதாகையிவுளிதேர்செழுங்கனலளித்தன
வலவன்யாரெனிற்குறிப்பொடென்னையாளவந்தநீ
தலமகீபரல்லதேவர்தானவரெதிர்ப்பினுங்
கொலைபடாமலேவர்போவர்குன்றெடுத்தகோவலா.

     (இ-ள்.) குன்று-கோவர்த்தனமலையை, எடுத்த-(குடையாக) எடுத்துப்பிடித்த,
கோவலா-பசுக்களைக் காத்தலில் வல்லவனே!  சிலை-(எனது) காண்டீவவில்லும்,
பதாகை-குரங்குக்கொடியும், இவுளி-(வெள்ளைக்) குதிரைகளும், தேர்-(சிறந்த)
தேரும், செழு