உந்துரககேதனனுரைப்பமுகிலேழுமுடனூழியிறுதிப்பொழிவபோல் வந்துவடிவாளிமழைசிந்தினர்பராக்கிரமவாசியிபமாவிரதரே. |
(இ-ள்.) முந்து படை வீரர்-(போருக்கு)முற்பட்டுவந்த சேனை வீரர்கள், கதை வீமன் எதிர்-(சந்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமசேனனது எதிரிலே, மிக நொந்து-மிகுதியாக வருந்தி, முதுகு இடுதல்-புறங்கொடுத்தலை, கண்டு - பார்த்து, உந்து உரக கேதனன்-உயர்ந்தபாம்புக்கொடியையுடைய துரியோதனன், முனியா - கோபங்கொண்டு, உரைப்ப - (அவ்வீம அருச்சுனரை எதிர்க்கும்படி கட்டளை) கூற,-ஐந்து உறழும் நூறு படி ஆயிரவர்-ஐந்தினாற்பெருக்கப்பட்ட நூறென்னும் அளவையுடையஆயிரமென்னுந்தொகையுடையவர்களும் [ஐந்துலக்ஷம்பேரும்], வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் - விற்போர் வல்லமையில் அருச்சுனனைப்போன்றவலிமையையுடையவர்களுமாகிய, பராக்கிரமம் வாசி இபம் மா இரதர்-பகைவெல்லும்ஆற்றலையுடையகுதிரை யானை பெருந்தேர் என்பவற்றில் ஏறிய வீரர்கள்,-முகில் ஏழ்உம்-ஏழுமேகங்களும், உடன்- ஒருசேர, ஊழி இறுதி-கால்பாந்தகாலத்தில் பொழிவ போல் - (வந்து) மழை பொழிவனபோல, வந்து-(திரண்டு எதிர்த்து) வந்து, வடி வாளி மழை சிந்தினர் - கூர்மையான அம்பின்மழையைப் பொழிந்தார்கள்; (எ-று.) பராக்கிரமம்-பர ஆக்கிரமம் எனப் பிரியும்; பரர்-பகைவர், (அவர்களை) ஆக்கிரமித்தல்-வென்றுவசப்படுத்தல்; இது-வீரர்க்கு அடைமொழி. உறழ்தல்- பெருக்கல். உந்துதல்-உயர்தல், ஏறுதல். ஊழி-பிரமனாயுள்; அல்லது, பிரமனது தினம். பிரமனதுநாள் ஒவ்வொன்றன் பகலிறுதியிலும் பிராமனாயுளிறுதியிலும், ஏழுமேகங்களும் விரைந்து ஒருங்கு எழுந்து அளவிறந்த மழைபொழிந்து உலகங்களை யழிக்கு மென்பது நூற்கொள்கை. பொழிவ=பொழிவது: விவகாரம். (345) 22.-அருச்சுனன் சென்று எதிரிகள் பொழியும் அம்புமழையை விலக்குதல். வெவ்வனமெரிக்கடவுளுண்டிடவணக்குமொருவில்லியுமவ்வில்லொ டெதிர்போ யவ்வவர்தொடுத்துவிடுமம்புகளெனைப்பலவுமவ்வகைதொடுத்து விலகிக் கைவரிவிலற்றுநடுநாணினடுவற்றுவளர்கைத்தலமுமற்றுவிழவே வைவரிவடிக்கணைகளேவினன்மணித்திகிரிவலவன்விடுதேரில் வருவோன். |
(இ-ள்.) மணி - அழகிய, திகிரி - சக்கராயுதத்தையுடைய, வலவன்-பாகனாகிய கண்ணபிரான், விடு - விசையாகச் செலுத்துகிற, தேரில்-இரதத்திலே, வருவோன் - வருபவனும், வெம்வனம்-கொடியகாண்டவவனத்தை, எரி கடவுள் உண்டிட - அக்கினிதேவன் புசிக்க, வணக்கும் - (தான்) வளைத்த, ஒரு வில்லிஉம்- ஒப்பற்றவில்லையுடையவனுமான அருச்சுனனனும், அ வில்லொடு- (காண்டீவமென்னும்) அந்த வில்லுடனே, எதிர்போய்-எதிரிற்சென்று, அ அவர் தொடுத்து விடும் அம்புகள் எனை பலஉம்-அந்தந்தப் பகைவீரர்கள் (வில்லில்) தொடுத்து விடுகிற அம்புகள் எல்லாவற்றையும், அ வகை தொடுத்து-அவர்கள் தொடுக்கும் |