வில்லும் அறுபட்டுவிழ, பல சரங்கள் தூவினன் - அநேகபாணங்களைப் பிரயோகித்தான்; (எ-று.) சாபமும் என்ற எச்சவும்மையால், அவனது இதயமும்தேரும் பிளத்தல் விளங்கும்; அடுத்த கவியிலுங் காண்க. சிகண்டி தலை காணலும்-சிகண்டியை எதிரிற் கண்டவுடனே என்றுமாம். ஒரு தான்-ஒப்பில்லாத தான் என்றுமாம். எதிரி-எதிர்ப்பவன். (பி-ம்:) பகழிமோது. மீளவந்தது. (355) 32.-சிகண்டி வந்தவழி மீள, வீடுமன் ஸ்ரீக்ருஷ்ணனது திருமேனியும் புண்படச் சரம்விடுதல். சாகநின்றிலன்றுருபதேயனெஞ்சமின்றிவரிசாபமின்றிவண்கொடிகொடேர் வாகமின்றிவந்தவழிமீளநின்றசந்தனுகுமாரனுஞ்சரங்கள்விடவே யூகமும்பிளந்துசுரராசன்மைந்தன்முந்திரதமூருகின்றசெங்கணெடுமான் மேகமுங்கருங்கடலுநீலமுங்கலந்ததிருமேனியுஞ்சிவந்ததறவே. |
(இ-ள்.) (அப்பொழுது) துருபதேயன்-துருபதராச குமாரனாானசிகண்டி, நெஞ்சம் இன்றி-மனமழிந்து, வரி சாபம் இன்றி-கட்டமைந்த வில் இல்லாமல், வண் கொடி கொள் தேர் வாகம் இன்றி-அழகியகொடியைக்கொண்ட தேராகிய வாகன மில்லாமல், சாகநின்றிலன்-இறக்க நிற்காதவனாய், வந்த வழி மீள-வந்தவழியே திரும்பிச்செல்ல, (பின்பு), நின்ற-, சந்தனுகுமாரன்உம்-சந்தனுராசபுத்திரனான வீடுமனும், சரங்கள்விட-அம்புகளைச்செலுத்த,-யூகம்உம்-(பாண்டவரது) படைவகுப்பும், பிளந்து-முறிபட்டு, சுரராசன் மைந்தன் முந்தி ரதம் ஊருகின்ற செம்கண் நெடுமால் - தேவேந்திரகுமாரனான அருச்சுனனுக்கு முன்நின்றுதேர்செலுத்துகிற சிவந்தகண்களையுடைய சிறந்த கண்ணபிரானது, மேகம்உம் கரு கடல்உம் நீலம்உம் கலந்த திரு மேனிஉம்-மேகத்தின் தன்மையும் கரியகடலின்தன்மையும்நீலரத்தினத்தின் தன்மையும் பொருந்தின அழகிய வடிவமும், அறசிவந்தது-மிகச் செந்நிறம் பெற்றது; அங்ஙனமானது, வீடுமன் விசையாக விட்ட அம்புமழைபட்டு இரத்தங்குழம்பியதனா லென்க. பிளந்து-பிளக்க எனத் திரிக்க. சாகநின்றிலன் என்றது, இன்னும் சிறிதுபொழுது சிகண்டி அங்கு நின்றிருந்தால் துச்சாதனனாற் கொல்லப்பட்டேயிருப்பானென்பதை நன்குவிளக்கும். துருபதேயன்-வடமொழித் தத்திதாந்தநாமம். தேர்வாகம்-தேர்க்கு திரையுமாம். (356) 33.-அருச்சுனன் சிகண்டியையிட்டுவந்துமுன்னேநிறுத்தி, அவனம்புகளோடு தன் அம்புகளை வீடுமன் மேனியிற் செலுத்துதல். போனதிண்சிகண்டிதனைமீளவுங்கொணர்ந்துபொருபூசலுங்கடந்திரதமே னீநிலஞ்சனின்கணையுமேவுகென்றுவெஞ்சமரினேர்நடந்துசென்றுவிசயன் கூனலங்கிதந்தசிலைகோலியம்பொடம்புபலகூடநெஞ்சழன்றுதையினான் வேனிலம்புமுன்புதுதையாதிலங்குமம்பொன்வரைமேனியெங்கணும் புதையவே. |
|