(இ-ள்.) (அப்பொழுது), விசயன்-அருச்சுனன், போன திண் சிகண்டிதனை- (அவ்வாறு) புறங்கொடுத்துச்சென்ற வலிய சிகண்டியை, மீளஉம் கொணர்ந்து - மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்து, (அவனை நோக்கி), 'நீ-,அஞ்சல்- பயப்படாதே; பொரு பூசல் உம் கடந்து-செய்தற்குரிய போரையும் மிகுதியாகச் செய்யக்கருதி, இரதம்மேல்-தேரின்மேலே, நில் - (தைரியங்கொண்டு) எதிர்த்து நில்; கணைஉம் ஏவுக-உனது அம்புகளையும்செத்துவாயாக', என்று-என்றுசொல்லி, (அவனை முன் நிறுத்தி), வெம் சமரில்-கொடிய அப்போரிலே, நேர் நடந்து சென்று-(தானும் வீடுமனை) எதிர்த்துப் போய், அங்கி தந்த கூன் நல் சிலை கோலி - அக்கினி கொடுத்த வளைத்தற்குரிய அழகிய (தனது காண்டீவ) வில்லை வளைத்து, அம்பொடு அம்பு பல கூட-(சிகண்டிவிடும்) அம்புகளுடனே (தனது பல) அம்புகளும் சேர,-வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் - வசந்தகாலத்துக்குரிய (மன்மதனது) பாணங்கள் முன்பு ஒரு பொழுதும் பதியப்பெறாமல்விளங்குகிற, அம் பொன் வரை மேனி எங்கண் உம்-அழகிய பொன்மயமான மேருமலை போன்ற (வீடுமனது சிவந்த) உடம்புமுழுவதிலும், புதைய-தைத்து அழுந்தும்படி, நெஞ்சு அழன்று உதையினான்-மனத்திற் கோபங்கொண்டு செலுத்தினான்; (எ-று.) துரியோதனாதியர்மேலுள்ள கோபம், அவர்கள்சேனைத்தலைவனான வீடுமன்மேலும் சென்ற தென்க. இங்கே, திண்சிகண்டியென்றது-இகழ்ச்சி. ஈற்றடி - வீடுமன் எப்பொழுதும் சிறிதும் காமவசப்படாதவ னென்பதை விளங்கும். வேனில் என்பதைக் காலவாகுபெயராய், அக்காலத்துக்குரிய மன்மதனுக்குக் கொள்ளினும் அமையும். பி - ம்: பலபூசலும். உகையினான். (357) 34.-வீடுமன் தன்னுடலிற்புதைந்தவை அருச்சுனனம்பின் வலிமையாலென்று தெரிந்து மகிழ்தல். தோளுநெஞ்சமுஞ்சிரமுமார்பமுந்தொடங்கிநிலைதோறும்வந்துவந்துருவவே சாளரங்கொளங்கவழியோடுகின்றவிந்துமுகசாயகங்கைகொண்டுபிடியா நாளறிந்தெதிர்ந்துபொருவோனுமைந்தனன்றுமுதனாமமுஞ்சிகண்டியிவனெய் வாளியொன்றுமிங்கெமையுறாதனஞ்சயன்செய்பெருவாழ்விதென்றறிந்துமகிழா. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) தோள்உம் நெஞ்சம்உம் சிரம்உம் மார்பம்உம்-, தொடங்கி - (என்னும் இவ்வுறுப்புக்கள்) முதலாக, நிலை தோறுஉம் - உயிர்நிலைகளிலெல்லாம், வந்து வந்து உருவ - (அம்புகள்) மிகுதியாக வந்து ஊடுருவிச்செல்ல, சாளரம் கொள் - (முழுவதும் பலதுளைபட்டுப்) பலகணியின் தன்மையை அடைந்த, அங்கம்வழி-(தன்) உடம்புவழியாக, ஓடுகின்ற-(அப்பாற்) செல்லுகிற, இந்து முகம் சாயகம் - சந்திரன்போன்ற வடிவமுள்ள [அர்த்த சந்திர] பாணங்களை, கை கொண்டு பிடியா - (தன்) கைகளாற் பிடித்து, (அவற்றில் பதிந்துள்ள அருச்சுனன்பெயரைப் பார்த்து), 'நாள் அறிந்து - (நாம் முன்புசொன்ன பத்தாம்போர்) நாளையறிந்து, |