ஆதி ஆன அரசர்- துரியோதனனை முதலாகவுடைய அரசர்களும், பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போல-பொங்குகின்ற கடலினால் உலகங்களழியும் அந்தயுகாந்த காலத்திற் (பிராணிகள் வருந்துவது) போல, சிங்கம் அன்னான் பாதம்சென்னி மேல்கொண்டு அழுதார்-சிங்கத்தை யொத்தவனான வீடுமனது திருவடிகளைத் தலைமேல் வைத்துக்கொண்டு புலம்பினார்கள்; (எ-று.) பாதம் சென்னிற்மேற் கொண்டு - திருவடிமீது முடிபடும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு என்க. நற்குணநற்செய்கைகளையுடைய பாண்டவர் பக்கல் அபிமானத்தால் 'இங்கும்' என்றும், தீக்குணம் தீச்செய்கைகளையுடைய எதிரிகள் பக்கல் வெறுப்பால் 'அங்கும்' என்றும் கவி கூறினார். பி - ம்: பொங்குங்கனலால். (363) 40. இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்; இருதிறத்தாரும் புலம்பல். மறமும்வாகுவலியும்வல்வின்முதலெப்படையின் திறமுந்தேசும்வாழ்வுஞ்சீருங்கேள்விச்செலவும் நிறமுமுண்மையறிவுநெறியும்புகழுந்திகழ்பேர் அறமும்பொன்றுநின்னோடையாவந்தோவந்தோ. |
(இ-ள்.) ஐயா-தலைவனே! மறம்உம்-பராக்கிரமமும், வாகுவலிஉம் - தோள்வலிமையும், வல் வில் முதல் எ படையின் திறம்உம்-வலியவில் முதலிய எல்லா ஆயுதங்களின் வல்லமையும், தேசுஉம்-ஒளியும்,வாழ்வுஉம்-(மதிப்போடு) வாழ்தலும,்சீர்உம்-சிறப்பும், கேள்வி செலவுஉம் - நூற்கேள்விகளின்படி ஒழுகும் ஒழுக்கமும், நிறம்உம்- பெருமையும், உண்மை அறிவுஉம்-தத்துவஞானமும், நெறிஉம்-நீதிவழியும், புகழ்உம்-கீர்த்தியும், திகழ் பேர் அறம்உம்- விளங்குகிற சிறந்ததருமமும், (என்னும் இவையெல்லாம்), நின்னோடு பொன்றும்-(உலகத்தில்) உன்னுடனே அழியும்; அந்தோ அந்தோ-! (எ-று.) உன்போலப் பராக்கிரமம் முதலியன உடையார் ஒருவரும் இனி உலகத்திலில்லை யென்பதாம், தேசு-க்ஷத்திரியதேஜஸ். அந்தோ அந்தோ, அடுக்கு-இரக்கம். நிறம்-நற்குணமுமாம். (364) 41. | தந்தையின்பமெய்தத்தவமேயின்பமாகச் சிந்தைதெளியுஞானச்செல்வாசெஞ்சேவகனே முந்தைமரபுக்கெல்லாமுதல்வாஞாலமுழுது மெந்தையாளவைப்பாரினியார்கோவேயென்றார். |
(இ-ள்.) தந்தை இன்பம் எய்த-பிதாவாகிய சந்தனு (இரண்டாவது மணஞ் செய்து) இன்பமடையும்பொருட்டு, தவம்ஏ இன்பம் ஆக சிந்தை தெளியும்- துறவறவொழுக்கத்தையே உலகவின்பமாகக்கருதி மனந்தெளிந்த, ஞானம் செல்வா- தத்துவஞானமாகிய செல்வத்தையுடையவனே! செம் சேவகனே-நீதிதவறாத வீரனே! முந்தை - பழமையான, மரபுக்கு எல்லாம் - குருகுலத்திற்பிறந்த |