பக்கம் எண் :

256பாரதம்வீட்டும பருவம்

       (இ -ள்,) அருக்கன் - சூரியன், வருணன் மைந்தன் பாடு வருணற்கு
உரைத்து-வருணனுக்குக்குமாரனானவீடுமன் அழிந்ததை (முந்தினநாள்மாலையில்)
வருணனுக்குச் சொல்லி, மீள - பின்பு, தருணம் மைந்தன் விசயம் சதமகத்தோன்
கேட்ப - இளமையையுடைய மகனான அருச்சுனனது வெற்றியை (அவன்
தந்தையான) இந்திரன் கேட்க(ச்சொல்லும்படி), இருள் நிறைந்த கங்குல் ஏங்கி
முன்னேஓட)-இருட்டு நிறைந்த இராத்திரி பயந்து முன்னே ஓட பொன் தேர்
அருணன் தூண்ட-(தனது) அழகியதேரை அருணன் செலுத்த, குணபால்
அடைந்தான் - கீழ்திசையைச்சேர்ந்தான்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. கீழ் நாற்பத்தாறாங்கவியிற் கூறியதை இப்பாட்டின்
முதலில் அனுவதித்தார். சதமகத்தோன்-நூறு (அசுவமேத) யாகங்களைச் செய்தவன்.
கேட்ப, ஓட, தூண்ட, அடைந்தான் என்க.                          (377)

பத்தாம்போர்ச்சருக்கம் முற்றிற்று.

வீ ட் டு ம ப ரு வ ம்

முற்றுப்பெற்றது.

-----------