பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்27

தவர்-படைத்தலைவர்கள், சாயகம் ஏவினார் - அம்புகளைச் செலுத்தினார்கள்;
(எ- று.)

     மந்த்ரம் - ஆலோசனை, தந்த்ரம் - சேனை: அவற்றையுடையவர், மந்திரியுந்
தந்திரியுமாவர். ஸாயகம் - வடசொல். மாமதி-மத்திமதீபம்.             (23)

24.மாண்டலீகர்தம்மார்புறையாகவே
மண்டலீகர்தம்வாட்படையோச்சினார்
சண்டவார்சிலைசாமந்தர்வாங்கவே
சண்டவார்சிலைசாமந்தர்வாங்கினார்.

     (இ-ள்.) மண்டலீகர்தம் மார்பு உறை ஆக - மண்டாலதிபதிகளான
அரசர்களதுமார்பு உறையாக இருக்கும்படி, மண்டலீகர்-, தம் வாள்படை
ஓச்சினார் - தங்களது வாளாயுதத்தை வீசினார்கள்; சாமந்தர்  - சாமந்தராசர்கள்,
சண்டம்வார் சிலை வாங்க- உக்கிரமான நீண்ட வில்லை வளைக்க,
(அவர்க்குஎதிரில்), சாமந்தர் சண்டம்வார்சிலை வாங்கினார்-;  (எ - று.)

     மண்டலீகன் - நாற்பதுகிராமம் ஆள்பவன்: ஒருகோடி கிராமம் ஆள்பவன்
மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன்
மண்டலீகனென்றும் ஒருசாரார் கூறுவர். ஓரு பேரரசனுக்குக் கீழ்ப்பட்டு
அவனுடையநாட்டின் கடைக்கோடியையாளுஞ் சிற்றரசர்க்கு ஸாமந்தரென்று பெயர்;
வடசொல். உறை - படைக்கூடு;  (ஆயுதங்கள்) உறுவது உறை யெனக்
காரணப்பெயர். தமதுவாள் முழுவதும் பிறரதுமார்பினுள்ளே சென்று நுழையும்படி
வீசின ரென்பார், 'மார்பு உறையாக ஓச்சினார்' என்றார்.                (24)

25.-இதுவும் அடுத்த கவியும் - அடிபட்ட வீரரின்
வருணனை.

முடியிழந்தநிருபர்முகுந்தனால்
இடிபடுந்தலைராகுவொடேயினார்
அடியிழந்தவராதபன்றேர்விடுந்
தொடிநெடுங்கைவலவனிற்றோன்றினார்.

     (இ - ள்.) (அவ்யுத்தத்தில்), முடி இழந்த நிருபர் - தலையறுபட்ட அரசர்கள்,
முகுந்தனால் இடிபடும் தலை ராகுவொடு ஏயினார்-திருமாலால் துணிக்கப்பட்ட
தலையையுடைய இராகுவோடு ஒத்தார்கள்; அடி இழந்தவர் - கால்களை
இழந்தவர்கள், ஆதபன் தேர் விடும் தொடி நெடுகை வலவனின் தோன்றினார் -
சூரியனது தேரைச் செலுத்துகிற தொடியென்னும் அணியையணிந்த
கைகளையுடையசாரதியான அருணன்போலக் காணப்பட்டனர்; (எ - று.)-
உவமையணி.

     ஆதபன் - நன்றாகத் தபிப்பவன்; தபித்தல் - காய்தல். தேரோட்டுவதில்
அவனுக்குள்ள கைத்திறமையை விளக்க, 'தேர்விடுந்தொடி நெடுங்கை வலவன்'
என்றார். வலவன் - வல்லவன்; இன்-ஐந்தனுருபு, ஒப்புப் பொருளது. இராகுவொடு
என்பதில், மூன்றனுருபு - ஐந்தாவ