பக்கம் எண் :

30பாரதம்வீட்டும பருவம்

லாகிய காரணத்தாற் குறித்தது உபசாரவழக்கு. பொய்யில் ஆம்மொழி பூபதி என
எடுத்தால், பொய்யின்பாற்பட்ட சொற்களையுடைய ராஜராஜனான துரியோதன
னென்று ஆகும். ஆண்மை - பௌருஷம். சில - குறிப்புப்பெயரெச்சம். (27)

28.வலக்கையற்றுவிழவுமனத்தொரு
கலக்கமற்றவெங்கார்முகத்தார்சிலர்
துலக்கெயிற்றுக்கணைதொடுத்தார்தொடை
யிலக்கமற்றபடையிலக்காகவே.

     (இ-ள்.) வலம்கை அற்று விழஉம் - (தமது) வலக்கை (எதிரிகள் வழங்கின
ஆயுதங்களால்) அறுந்து விழவும், மனத்து ஒரு கலக்கம் அற்ற- (தம்) நெஞ்சிலே
(தைரியநிலைமை) கலங்குதல் சிறிதுமில்லாத, வெம் கார்முகத்தார் - பயங்கரமான
வில்லையுடையவர்களாகிய, சிலர் - சிலவீரர்கள்,-தொடை - தொடச்சியாகவுள்ள,
இலக்கம் அற   எண்ணில்லாத, படை - (பகைவர்) சேனைகள், இலக்கு ஆக -
எய்யுங் குறியாக, துலக்கு எயிறு கணை தொடுத்தார் - விளங்குந்தன்மையுள்ள
(தமது) பற்களால் அம்புகளை (வில்லில்) தொடுத்து எய்தார்கள்; (எ-று.)

     வலக்கையற்றவர், அம்பெய்யக் கையில்லாமையால், பல்லால் தூணியிலிருந்து
அம்புகளையெடுத்து இடக்கையிற்பிடித்துள்ள வில்லில் தொடுத்தனரென்பதாம். இது -
போரில் அவர்களுக்கு உள்ள ஊக்க மிகுதியை விளக்கும். தொடை -
போர்மாலையைச்சூடிய என்றுமாம். கார்முகம் - வடசொல்; தொழிலில் வல்லதென்று
அவயவப்பொருள். துலக்கு - முதனிலைதிரிந்த தொழிற்பெயர். தொடை-தொடுத்தல்;
ஐ - விகுதி. இலக்கு-லக்ஷ்யம்; வடசொல். இலக்கமற்ற........இலக்காக -
முரண்தொடை.
'துலக்கெயிற்றுப்படை' என்று பிரதிபேதம்.         (28)

29.தாளிரண்டுடைச்சிங்கமன்னார்சமர்
வாளிரண்டொர்தொடையினில்வாங்கினார்
கோளிரண்டுமெனக்குறுகார்தடந்
தோளிரண்டுந்துணிந்தெதிர்வீழவே.

     (இ-ள்,) தாள் இரண்டு உடை சிங்கம் அன்னார்-இரண்டுகால் களையுடைய
சிங்கத்தைப் போன்ற சிலவீரர், சமர்-போரில், குறுகார் தட தோள் இரண்டுஉம் -
பகைவர்களது பெரிய இரண்டு தோள்களும், கோள்இரண்டுஉம் என -
(ராகுகேதுக்களாகிய) இரண்டு கிரகங்கள் போல, துணிந்து எதிர் வீழ - அறுபட்டு
எதிரிலே விழும்படி, வாள் இரண்டு ஓர் தொடையினில் வாங்கினார்-
இரண்டுவாளாயுதங்களை ஒருவீச்சில் வீசினார்கள்; (எ-று,)

     சமகாலத்தில் எதிரியின் இரண்டுதோளும் அற்றுவிழும்படி இரண்டு
வாள்களையெடுத்து ஒருங்குவீசினரென்பதாம். இதிலும் ஊக்கமிகுதி விளங்கும்.
தாளிரண்டுடைச் சிங்கம் - இல்பொருளுவமை: எந்தப்பிராணியையுந்
தவறாதுகொல்லவல்ல தன்மையிலும், பிறர்க்கு அதிபதியாகுந்தலைமையிலும்
சிங்கமாகிய விலங்கை.