தாளிலானடத்துந்தடந்தேருடை மீளியாமெனநின்றனர்வீரரே. |
(இ - ள்.) வாளி ஆயிரம் தைத்தவழி எலாம் - (தம்உடம்பில் பகைவர்எய்த) பலபாணங்கள் தைத்த துளைகளொல்லாவற்றிலிருந்தும், ஓளி ஆக ஒழுகும் - ஒழுங்காகப்பெருகுகிற, குருதியால்-இரத்தத்தால், வீரர் - சில வீரர்கள், தாள் இலான்நடத்தும் - கால்களில்லாத அருணனாற் செலுத்தப்படுகிற, தட தேர் உடை-பெரியஇரதத்தையுடைய, மீளி என - பெருமையிற்சிறந்த சூரியன் போல, நின்றனர் -நின்றார்கள்; (எ-று,) தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மிக்க செந்நிறமுடைமைபற்றி வந்தது. சூரியனுக்குக் கிரணங்கள் ஆயிரமாதலால், 'வாளியாயிரந்தைத்தவழியெலா மொழுகுங்குருதி' எனப்பட்டது. வாளியாயிரம் என்பதில், ஆயிரம் என்பது - மிகப்பலவென்னுமாத்திரமாய் நிற்கும். ஓளியாக - இடைவிடாது தொடர்ச்சியான தாரைகளாக என்றபடி. தொடைகளில்லாமைபற்றி, அருணனுக்கு வடமொழியில் 'அநூரு' என்று ஒருபெயர் உண்மையின், 'தாளிலான்' என ஒருபெயர் கூறினார். சூரியனுடைய ரதம் பதினாயிரம் யோசனை விசாலமுள்ள தாதலின், 'தடந்தேர்' எனப்பட்டது. ஆம் - ஆசை. (33) 34. | வெட்டி னாரவர் மெய்யிற் படாமைநின் றொட்டி னாரிமைப் போதினி லோடியே தட்டி னாருடலைத் தழுவிக் கொடு கட்டி னார்விழுந் தார்சில காளையர். |
(இ-ள்.) சில காளையர் - சிலவீரர்கள், வெட்டினார் - (பகைவரால்) வெட்டப்பட்டார்கள்; ஓட்டினார் - (தாம் பகைவரைக் கொல்வதாக முன்னே) சபதஞ்செய்தவர்களாகிய, அவர் - அவ்வீரர்கள், மெய்யின் படாமை நின்று - அந்தச்சபதவுண்மையினின்றுந் தவறாமல் நிலைநின்று, இமை போதினில் ஓடி - ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே விரைந்து சென்று, தட்டினார் உடலை தழுவி கொடு- (தம்மை) வெட்டினவராகிய அவ்வீரரது உடம்பை அணைத்துக் கொண்டு, கட்டினார் விழுந்தார் - கட்டிவிழுந்தார்; (எ-று.) என்றது, ஒருவரை யொருவர் கொல்வதாகப் பிரதிஜ்ஞை செய்து மிக்க கோபாவேசத்தோடு விரைந்து தொந்தயுத்தஞ் செய்கிற இரண்டு வீரருள் ஒருவன் மற்றொருவனை முதலில் வெட்ட, முன் தொடர்ச்சியால், உடனே அவ்வெட்டுண்டஉடல் வெட்டினவன்மேல் சென்றுவிழுந்து அவனைத்தழுவி யணைத்துக் கீழே தள்ளிக் கொன்று அவ்வீரவாதத்தை உண்மையாக நிறைவேற்றிற்றுஎன்றவாறும்; இது - மிக்கவீரத்தை விளக்கும். இமை, நொடி, மாத்திரை என்பன -ஒருபொருளான; கால நுட்பமுணர்த்தும். இப்பாட்டுக்குப் பிறவாறு உரைப்பாராயினும்உய்த்துணர்ந்து பொருந்துமாயிற் கொள்க. (34) |