பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்67

தன்மைத்தற்குறிப்பேற்றவணி. பவ்வம், கவ்வை - பௌவம், கௌவை
என்பவற்றின்போலி. ஐவர்-தொகைக்குறிப்பு. கலந்த-முற்று. (80)

4.-தூளிப்பெருக்கமும் பல்லியவொலியும்.

வெம்பராகம்வெளியிலுற்றெழுந்தபோதுவேழவிற்
சம்பராரிதகனநாளினன்றெழுந்ததன்மையென்
றும்பரார்நடுங்கினாருருத்துவீழுமுருமென
விம்பரார்நடுங்கினாரிரங்குபல்லியங்களால்.

     (இ-ள்.) (அந்தச் சேனைகளாற் கிளப்பப்பட்ட), வெம்பராகம் - மிகுந்த
தூளிகள், வெளியில் உற்று எழுந்த போது - வெளியிலே தோன்றி
மேலெழுந்தபொழுது, வேழம் வில் சம்பராரி தகனம் நாளின் அன்று எழுந்த
தன்மைஎன்று-கருப்புவில்லையுடைய மன்மதனை யெரித்த தினமாகிய
அப்பொழுதில்(சிவபிரானது நெற்றிக்கண்ணின் நெருப்பின் புகை) மேலெழுந்த
விதத்தை யொக்குமென்றுகருதி, உம்பரார் நடுங்கினார் - மேலுலகத்துள்ள
தேவர்கள் மிகஅஞ்சினார்கள்; இரங்கு பல் இயங்களால்-ஒலிக்கிற
(அச்சேனைகளிலுள்ள) அநேகவாத்தியங்களின் முழக்கத்தால், உருத்து வீழும்
உரும் என - கர்ச்சித்துவிழுகிறஇடியென்றுகருதி, இம்பரார் நடுங்கினார் -
இவ்வுலகத்துள்ள மனிதர்கள் மிகஅஞ்சினார்கள்; (எ - று.)

     மயக்கவணி. பராகம், சம்பராரி, தஹநம்-வடசொற்கள். சம்பராரி- சம்பர
அரிஎனப் பிரியும்; சம்பரனென்னும் அசுரனுக்குச்சத்துருவென்று பொருள்:
இவ்வசுரனைமன்மதன் கண்ணபிரானுக்கு ருக்குமிணிப்பிராட்டியிடத்துப்
பிரத்யும்நனென்னும்புத்திரனாகப் பிறந்த பொழுது கொன்றனனென வரலாறு. (81)

5.-இதுவும், மேற்கவியும் - குளகம்: சேனைத்தலைவனோடு தருமபுத்திரன்
களத்தில் அணிவகுத்துநிற்றலைக் கூறும்.

அளவின்மன்னரேறுதேர்களாறிரண்டுபத்துநூ
றிளவலோடுகசதுரங்கமங்களோடுமிடம்வரப்
பளகமன்னவெழுபதிற்றுப்பத்துநூறுதேரொடும்
வளவராதிமன்னரோடுநகுலராசன்வலம்வர.

     (இ - ள்.) இளவல் - (பாண்டவருள்) இளையவனான சகதேவன், அளவு
இல்மன்னர் ஏறு- எண்ணிறந்த அரசர்கள் ஏறியுள்ள, ஆறு இரண்டு பத்து நூறு -
பன்னீராயிரமென்னுந் தொகையுள்ள, தேர்களோடு - இரதங்களுடனும், கச
துரங்கமங்களோடு உம் - யானைகள் குதிரைகளுடனும், இடம் வர -
இடப்பக்கத்திலே வரவும், நகுலராசன்-, பளகம் அன்ன - மலைகளைப்போன்ற,
எழுபதிற்று பத்து நூறு தேரொடும் - எழுபதினாயிரந்தேர்களுடனும், வளவர் ஆதி
மன்னரோடும் - சோழர்முதலிய அரசர்களுடனும், வலம் வர-வலப்பக்கத்திலே
வரவும்,- (எ - று.)-'நாயகன் நின்றனன்' என மேற்கவியில் முடியும்.