மேவலர் விதம் படையும் வீடுமன்உம் உட்கும் வகை - பகைவர்களது பலவகைச்சேனைகளும் (அச்சேனைத்தலைவனான) பீஷ்மனும் அஞ்சும்படி, பூவலயம் முற்றுஉம் எழுகாலம் இறுதி பரவை போல்- பூமண்டலமுழுவதிலும் பொங்கிப்பரவுகிற கல்பாந்தகாலத்துப் பிரளயப் பெருங்கடல்போல [யாவரையும் அழிக்குமாறு], இகல் விளைத்த பொழுதில் - போரைச்செய்தசமயத்தில், சர்ப்ப துவசம் காவலன்-பாம்புக் கொடியையுடைய துரியோதனராசன், கூவலின் நிலைபுனல்உம் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு - கிணற்றினுள் நின்ற நீர் மேற்கிளம்புவதைப் போன்ற [உள்ளிருந்து வெளிக்கிளம்பின] ஒரு பெருங்கோபத்துடனே, உரைப்ப - (முனைந்துசெல்லும்படி) கட்டளை கூற, காவலர் எனை பலர்உம் - அரசர்களெல்லோரும், இருவோரைஉம் வளைத்தனர்கள் - (வீமனும் அபிமன்யுவு மாகிய) அவ்விரண்டுபேரையுஞ் சூழந்துகொண்டார்கள். வீமனும் விறற்புதல்வனும் - அன்புடைமைபற்றி, தம்பிமகனை அவன் மகன்போலக் கூறியது. புனலும், உம் - அசை; இழிவு சிறப்புமாம். பரவை - பரவியது. 'கூவலினிலைப்புனலுமீதெழுவ தொத்ததொரு கோபம்' என்பதற்கு - கிணற்றுநீருங் கொதித்து மேற்கிளம்பத்தக்கதாகிய கடுங்கோபமென்று உரைப்பாருமுளர். பி-ம்: கோபமொடுமத்தினபுரிக். (104) 28.-அருச்சுனன் வீமஅபிமன்யுக்களைக் குறுகுதல். தானவர்சமத்துமிருதோள்வலியுமற்றுமுனைதானைபுறகிட்டழியவே வானவர்துதிக்கவயவாகைபுனையக்கடவுள்வாழ்வினிதளித்துவருவோன் மீனவனெனத்தகையகாளையொடெடுத்தகதைவீமனவளைத்தனரெனக் கூனல்வரிவிற்பகழிதூவியிரதத்தின்மிசைகூவியவரைக்குறுகினான். |
(இ - ள்) தானவர் - (நிவாதகவசரும் காலகேயரு மாகிய) அசுரர்கள், சமத்துஉம் இருதோள் வலிஉம் அற்று - (தங்கள்) சாமர்த்தியமும் இரண்டு தோள்களின்பலமும்ஒழிந்து, முனை - போர்க்களத்திலே, தானை - சேனைகளுடனே, புறகு இட்டு -(முன்னே) முதுகுகொடுத்து, அழிய - (பின்பு) அழிந்திடவும்,-வானவர் துதிக்க-தேவர்கள் புகழவும்,-வய வாகை புனைய- வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைச்சூடவும், கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் - (இந்திரன் முதலிய)தேவர்களுக்கு வாழ்க்கையை இனிமையாகக் கொடுத்து தன்மையனாகியஅருச்சுனன்,- 'மீனவன் என தகைய காளையொடு- மீன்வடிவமெழுதியகொடியையுடைய மன்மதனென்று (அழகிலும் பேராற்றலிலுஞ்) சொல்லத்தக்க(தன்மகனான) அபிமனுடனே, எடுத்த கதை வீமனை-ஏந்திய கதாயுதத்தையுடையவீமனையும், வளைத்தனர்-(பகையரசர்களெல்லோரும் ஒருங்கு) சூழ்ந்தார்கள்,' என -என்று அறிந்து, கூன் நல் வரி வில் பகழி தூவி - வளைந்த சிறந்த கட்டமைந்த(தனது காண்டீவமென்னும்) வில்லினின்று அம்புகளைத் தொடுத்து, கூவி-(அவ்வரசர்களைப் போருக்கு) அழைத்துக் கொண்டு, இரதத்தின் மிசை - தேரின்மீது,அவரை குறுகினான் - அந்த அண்ணனையும் புதல்வனையும் சமீபித்தான்; (எ -று.) |