பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்93

     (இ - ள்.) (வந்த வீடுமன்)-, வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம்
துளைத்த வாளி வழி கண்டான் - வண்டுகள் ஒலிக்கப்பெற்ற
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனது மார்பை ஊடுருவின
அம்புசென்ற வழியைப் பார்த்தான்; தாழ்ந்த திரு கையால் எடுத்து அணைத்து -
நீண்டுதொங்குகிற அழகிய (தன்)கைகளால் (அத்துரியோதனனை) எடுத்துத் தழுவி,
கால் தேரில்கொண்டான்-சக்கரவலிமையையுடைய (தனது) தேரின்மீது
வைத்துக்கொண்டு, ஆவி தரும் மருந்து கொடுத்தான்-உயிரைத் தரவல்ல திவ்விய
ஒளடதத்தை (அவனுக்குக்) கொடுத்தான்; உலகு ஏழ் உடையான் அவன்உம் - ஏழு
தீவுகளாகிய பூமிமுழுவதையும் (தனதாக) வுடையனான அத்துரியோதனனும்,
கொடுத்த மருந்து உண்டான்-(வீடுமன்) தந்த மருந்தையுட்கொண்டான்; உண்ட
கணத்தினில்-உட்கொண்ட அந்த க்ஷணத்தில் தானே, மீண்டு உணர்ந்தான்-
மறுபடிஉணர்ச்சிபெற்றான்; (எ - று.)- மூர்ச்சை தெளிந்து முன்போலாயின
னென்றபடி.                                                  (119)

11.-வீடுமன் துரியோதனனை அணியில்நிறுவியபின் 
வீமன் முதலியோர் பின்னிடக் கடும்போர்புரிதல்.

மன்னன்றனையச்சந்தனுவின் மைந்தன்பெரும்பேரணிநிறுவிப்
பொன்னங்குன்றேயிவன்சிலையு மிவனேகாணு புராரியென
மின்னுங்கழற்கால்வீமனுடன்வெம் போர்விளைத்துவிடலைபராய்
முன்னின்றவரும்பின்னிடத்தன் முனைவாளியினால்வினைசெய்தான்.

     (இ - ள்.)  (இவ்வாறு தேற்றி), மன்னன்தனை - துரியோதனராசனை, அ
சந்தனுவின் மைந்தன் - சந்தனுகுமாரனான அவ்வீடுமன, பெரு பேர் அணி
நிறுவி-மிகப்பெரிய படைவகுப்பிலே நிறுத்தி, (பின்பு), 'இவன் சிலைஉம் பொன்
அம்குன்றுஏ இவன் புர அரிஏ காணும்' என-'இவனது வில்லும் பொன்மயமான
அழகியமகாமேருமலையே: இவனும் திரிபுரத்தையழித்திட்ட பரமசிவனே: 
பாருங்கள்' என்று(தன்வில்லையுந் தன்னையும்பற்றி அனைவருங்) கூறும்படி,
மின்னும் கழல் கால்வீமனுடன் - விளங்குகின்ற வீரக்கழலையணிந்த
பாதத்தையுடைய வீமசேனனும்,வெம் போர் விளைத்து விடலையர் ஆய்
முன்நின்றவர்உம் - (துரியோதனனோடு)கொடியபோரைச் செய்து இளவீரர்களாய்
முன்னேநின்ற கடோற்கசனும்அபிமந்யுவம், பின் இட - புறங்கொடுக்கும்படி, தன்
முனைவாளியினால் வினைசெய்தான்-தனது கூரிய அம்புகளால் போர்த்
தொழிலைப் புரிந்தான்;  (எ - று.)

     நிறுவி, நிறுவு-பகுதி. பெரும்பேர்-சிறப்புணர்த்தும் அடுக்கு; இனி, மிக்க
புகழையுடைய வென்றும் உரைக்கலாம். காணும் என்பதை முன்னிலையசையென்றும்,
தேற்றமென்றும் கொள்ளினுமாம்.

12.-வீடுமன் தருமன்சேனையிற் பலரையும் கொன்றுகொண்டு திரிதல்.

மருமங்களினும்புயங்களினும் வதனங்களினுங்கண்களினுஞ்
செருமும்படிவெங்கணைமாரி சிந்திச்சிந்திச்சிரந்துணித்துத்
தருமன்சேனைப்பரவையெலாந் தானேயாகித்தலைநாளிற்
பொருமந்தரமால்வரைபோலத் திரிந்தான் வெம்போர்புரிந்தானே.