பக்கம் எண் :

10பாரதம்துரோண பருவம்

தான்உம்- நகுலனுக்குத் தம்பியான சகதேவனும், (தேரினின்று இறங்கி), நகு-
பிரகாசிக்கிற, மணி - இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற, வலயம்-
வளையையணிந்த,தோள்மேல்-(தன்) கையில், மிகு திறல் தண்டுகொண்டுஏ -
மிக்கவலிமையையுடைய கதாயுதத்தை எடுத்துக் கொண்டே, வென் இட -
(அச்சகுனி) முதுகுகொடுக்கும்படி, பொருது - போர்செய்து, மீண்டான் - திரும்பி
(த்தேர்மீது) ஏறினான் ; (எ - று.)

     தேரினின்று இறங்கிக் கையிற் கதையை யேந்திய சகுனி, சிறிதுபொழுதேனும்
எதிர்த்துநின்று அவ்வாயுதங்கொண்டு போர் செய்யமாட்டாமல் உடனே அஞ்சிப்
புறங்கொடுத்துத் தோற்று ஓடுதலால், அவனுக்கு அப் படைக்கலம்
போர்க்கருவியாகாது, வழுக்குதலுடைய சேற்றுநிலத்திற் சறுக்கிவிழாமல் ஓடுதற்கு
உதவியாகிற ஊன்றுகோல்மாத்திரமாகப் பயன்பட்டதென்றார்; இது -
தற்குறிப்பேற்றவணி. அத்தேர் - பாகனும் துவசமும் குதிரையும் இழந்த தேர்.
பி -ம்:
இளையகோவும்.                                      (10)

11.-துரியோதனன் வீமனோடு பொருதல்.

மதாசலமகுடமான்றேர்வாம்பரிவயவர்வெள்ளப்
பதாதியெம்மருங்கும்போதப்பார்த்திவர்நிழலிற்போதப்
பிதாமகனிறந்தானென்றுபேதுறுநிருபன்போந்து
சதாகதிமைந்தனோடுந்தாக்கினன்றபனன்போல்வான்.

     (இ-ள்.) மத அசலம்- மதத்தையுடைய மலைகள் போன்ற யானைகளும்,
மகுடம் மான் தேர் - சிகரத்தையுடைய குதிரைகள் பூட்டிய தேர்களும், வாம்பரி -
தாவிச்செல்லுங் குதிரைகளும், (என்னும் இவற்றில் ஏறிய), வயவர் - வீரர்களும்,
பதாதி வெள்ளம்- காலாள்களின் கூட்டமும், எ மருங்குஉம் போத - எல்லாப்
பக்கங்களிலும் (சூழ்ந்து) வரவும், பார்த்திவர் - அரசர்கள், நிழலின் -(தனது)
நிழல்போல, போத (நீங்காது உடன்) வரவும்,- தபனன் போல்வான் -சூரியன்போல
விளங்குபவனான, பிதாமகன் இறந்தான் என்று பேது உறு நிருபன்-
பெரியபாட்டனான வீடுமன் அழிந்தானென்று மதிமயக்கமடைந்த துரியோதனராசன்,-
போந்து-வந்து, சதாகதி மைந்தனோடுஉம்- வாயுபுத்திரனான வீமசேனனுடனே,
தாக்கினன்- எதிர்த்துப்பொருதான்; ( எ-று.)

     பார்த்திவர் - பிருதிவியை ஆளுபவர் ; தத்திதாந்தநாமம்:  ப்ருதிவீ - பூமி ;
ப்ருது என்னும் அரசனால் சீர்ப்படுத்தப்பட்டமை பற்றிய பெயர் இறந்தான் என்றது,
இங்கே இலக்கணை; வலிமை முழுதுமொடுங்கி இறந்தாற்போலானா னென்றபடி.
பேது - பேதம் என்னும் வடசொல்லின் விகாரம். 'தபனன் போல்வான்' என்பதனை,
வீமனுக்கு அடைமொழியாக்கினும் பொருந்தும், மேல் அவனே வெல்லுதலால்.  (11)

12.- வீமன் துரியோதனனோடு அவனைச் சார்ந்தாரையும் வெல்லுதல்

அரிக்கொடியரியேறன்னானரவவெங்கொடியுமற்று
வெருக்கொள்பேரரவமன்னான்வில்லுமுனற்றுவீழ