பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்109

வெல்லவந்ததுரோணமாமுனிவிறலழிந்ததுகுருவெனுஞ்
சொல்லழிந்ததுவில்லழிந்ததுதேரழிந்ததுதொடைகளால்.

     (இ-ள்.) மல்லல், - வலிமையையுடைய, அம்-அழகிய, புயம்- தோள்களையுடைய,
அபிமன் - அபிமந்யுவினது, வெம் சரம் மழை அனைத்தைஉம்-கொடிய அம்புமழை
முழுவதையும், (துரோணன்) மால் என-கண்ணபிரான் போல, பல்ல வெம் கணை
கொடு விலக்கி-பலவாகிய கொடிய (தன்) அம்புகளைக்கொண்டு தடுத்து, முனைந்து
வந்து-கோபித்து வந்து, எதிர் பற்றினான் - எதிரில் தகைந்தான்; தொடைகளால்-
(அப்பொழுது அபிமனெய்த) அம்புகளால், வெல்ல வந்த துரோண மா முனி-
சயிக்கவந்த துரோணசாரியனது, விறல்-பராக்கிரமம் - அழிந்தது-; குரு எனும்
சொல்- ஆசிரியனென்னும் புகழ், அழிந்தது-; வில் அழிந்தது-; தேர் அழிந்தது-,
(எ - று.)

     இந்திரனது அம்புமழையை மலைகொண்டு தடுத்த  க்ருஷ்ணனையொப்ப,
'மாலென'என்றார், பல்லம் வெம் கணைஎனப்பிரித்து- பல்லமாகிய
வெவ்வியகணையெனினுமாம்.                                     (163)

26.- பின்புஎதிர்த்த அசுவத்தாமன் அபிமன்கணையில் மூழ்குதல்.

தந்தைவென்னிடுமுன்னர்முப்புரதகனனேநிகர்மகன்மிகச்
சிந்தைகன்றிவெகுண்டுதேரொடுசென்றுகால்வளைசிலையினா
லுந்துகின்றசிலீமுகம்பலபகைமுகங்களிலுருவவே
முந்தினானவனப்புமாரியின்முழுகினானுடன்முற்றுமே.

     (இ-ள்.) (இவ்வாறு யாவும் அழிந்து), தந்தை வென் இடு முன்னர் - (தனது)
பிதாவான  துரோணன் புறங்கொடுக்கு முன்னே, மு புரம் தகனன்ஏ நிகர் மகன் -
திரிபுரசங்காரஞ்செய்திட்ட சிவபிரானையே போன்ற புத்திரனான அகவத்தாமன்,
வெகுண்டு-கோபித்து, சிந்தை மிக கன்றி - மனம் மிகவெதும்பி, தேரொடு சென்று-
(தன்) தேருடன்போய், கால் வளை சிலையினால் - கழுந்து வளைந்த (தன்)
வில்லினால், உந்துகின்ற-பிரயோகிக்கிற, சிலீமுகம் பல - அநேகம் அம்புகளால்,
பகை முகங்களில்-பகைவர்களது முகங்களிலே, உருவ-துளைத்துச் செல்லும்படி,
முந்தினான்-போரில் முற்பட்டு, (உடனே), அவன் அம்பு மாரியின் - அந்த
அபிமனது அம்புமழையில், உடல் முற்றுஉம் முழுகினான் -(தனது) உடம்பு
முழுவதும்மூழ்கப்பெற்றான்:    (எ-று.)

     சிவாநுக்கிரகத்தாற் பிறந்த குமார னாதலால், அவனுக்குச் சிவபிரானையே
உவமைகூறினார். புரதஹநன் - வடமொழித்தொடர், 'கால்வளைசிலை' என்பதற்கு -
பாதத்தால்' ஒருகோடியை அழுத்தி வளைக்கப்பட்ட வில்லென்றுமாம். 'முழுகினான்'
என்ற வினைக்கு  ஏற்ப, 'அப்புமாரி'என்பது - நீர்மழை யென்றும் பொருள்படும்;
தொனி. அம்பு, அப் என்ற வடசெற்கள், நீரின்பெயராம்.                 (164)

27.-கன்னன் அபிமனையெதிர்த்துப் பின்னிடுதல்.

கன்னனென்றுல கெண்ணும்வீரனு மொய்ம்புடன்பலகணைகள்வான்,
மின்னொழுங்கொருகோடியென்னநிறுத்திமெய்யுறவீசி