பக்கம் எண் :

110பாரதம்துரோண பருவம்

னான்அன்னவன்பகழிக்குலங்களநேகமோகரமாகையா,
லென்னவெஞ்சமமினிநமக்கெனவேறுதேருடனேகினான்.்

     (இ-ள்.) (பின்பு), கன்னன் என்று  உலகு எண்ணும் வீரன் உம்-கர்ணனென்று
பெயர்பெற்று உலகத்தாரால் (கௌரவமாக) எண்ணப்படுகிற பராக்கிரமசாலியும்
மொய்ம்புடன்-வலிமையோடு, பல கணைகள் - அநேக அம்புகளை, வான் மின்
ஒழுங்கு ஒரு கோடி என்ன,-ஆகாயத்திற்காணப்படும் மின்னலின் வரிசைகன்
மிகப்பல போல, நிறுத்தி-வில்லில் தொடுத்து, மெய்உற வீசினான்-(அபிமனது)
உடம்பிற்படும்படிபிரயோகித்தான்; (ஆயினும்), அன்னவன் பகழி குலங்கள்
அநேகம்மோகரம் ஆகையால் - அவ்வபிமனது அம்புக் கூட்டங்கள் மிக
உக்கிரமாயிருத்தலால்,-இனி நமக்கு வெம் சமம் என்ன என - 'இனிமேல் நமக்கு
(அவனோடு) கொடிய போர் செய்யும் ஆற்றல் யாது உள்ளது? என்று (கருதி), ஏறு
தேருடன் ஏகினான் - (நான்) ஏறிவந்த தேரொடு பின் சென்றான்; (எ - று.)

     ஒருகோடி - மிகப்பலவாகிய எண்ணிற்கு ஓன்று எடுத்துக் காட்டியவாறு. வில்
முதலிய ஆயுதங்கள் அழிந்தமை தோன்ற, 'ஏறுதேருடன் ஏகினான் என்றார், வேறு
எனப் பதம்பிரித்தல், மோனைத்தொடைக்குச் சிறவாது.                 (165)

28. கிருபனும் கிருதவர்மனும் எதிர்த்து, அபிமனுடைய
ஒருதொடுப்பிலே வெருவியோடுதல்.

கிருபமாமுனிதானுமேதகுகிருதவன்மனுமோர்புறத்
திருவாரண்மையுநிலைபெறும்படிசென்றுதூவினரேவினால்
ஒருவனேயிவனிவனெடுத்ததுமொருசராசனமம்பிலே
வெருவியோடினர்தங்களோரிருவில்லுமற்றுவெறுங்கையே,

     (இ-ள்.) கிருபன் மா முனி தான்உம் - சிறந்த கிருபாசாரியனும், மேதகு
கிருதவன் மன்உம்-மேன்மை பொருந்திய கிருதவர்மாவென்னும் யதுகுலத்தரசனும்,
ஓர் புறத்து-ஒரு பக்கத்தில், இருவர் ஆண்மை உம் நிலை பெறும்படி, சென்று-
(எதிர்த்துச்) சென்று, ஏவினால் தூவினர்- அம்புகளால் பொழிந்தார்கள் -
(அப்பொழுது), இவன் ஒருவன்ஏ - (எதிர்ப்பவன்) இவ்வபிமந்யு ஒருத்தனேதான்:
இவன் எடுத்ததுஉம் ஒரு சராசனம் - இவன் (கையில்) ஏந்தினதும் ஒரு வில்தான்;
(அங்ஙனம் இருந்தும்), அம்பிலே- (இவனது) அம்புகளாலே, (அவ்விரண்டு பேரும்),
தங்கள் ஒர் இரு  வில்உம் அற்று - தங்களது வில்லிரண்டும் அறுபட்டு, வெறு
கை-ஆயுதமில்லாத கைகளையுடையவராய், வெருவி ஓடினர்-அஞ்சிஓடிப்
போனார்கள்:(எ- று.)                                          (166)

29.-அபிமனால் சகுனியின் மகன் முதலோர் இறந்துவிழ,
மற்றையாவரும் நடுங்கி யோடுதல்.

சகுனியுந்திருமகனுமற்றுளதமருமேலிடுதானையோ
டிகனெடுங்களம்வென்றுகொள்குவமென்றுவந்தெதிரணுகினார்