றமை' என்பதற்கு - பகைவர்கள்பலர் அபிமன் வருந்தும்படி வந்து போரைக் கொடுமையாகச்செய்து நின்ற தன்மையை யென்று உரைப்பாரு முளர். (170) 33.-வீமன் தருமனை நோக்கிக்கூறுவது. தோலநேகமநேகநேமிதூங்கமங்களநேகநீள் வேலநேகமநேகம்வாள்வரிவில்லநேகவிதம்படக் காலநேகமெழுந்ததொத்தமராடுகின்றகளத்திடைப் பாலனேகடிதேகிவெம்முனைபயிலுவானொருபாவமே. |
இதுமுதல் மூன்று கவிகள் - குளகம். (இ-ள்.) 'தோல் அநேகம்-பல யானைகளும், அநேகம் நேமி - பல தேர்களும், துரங்கமங்கள் அநேகம் -பல குதிரைகளும், நீள் வேல் அநேகம் - நீண்ட பல வேல்களும், அநேகம் வாள்-பல வாள்களும், வரிவில் அநேக விதம்-கட்டமைந்த பலவகை விற்களும், பட - பொருந்த, கால் அநேகம் எழுந்தது ஒத்து-பலதிசைக் காற்றுக்களும் கிளர்ந்துவீசுவது போன்று, அமர் ஆடுகின்ற-போர்செய்கிற களத்திடை-யுத்தகளத்திலே, பாலன்ஏ - இளங்குமரனான அபிமனொருவனே, கடிதுஏகி- விரைவிற்சென்று, வெம்முனை பயிலுவான் - கொடியபோரைச் செய்து பொருந்துவான்: ஒரு பாவம்ஏ- (இங்ஙனம் அவனைத் தனியே பகைவர்சேனாசமூகத்தினிடையில் போருக்கு விட்டுப் பார்த்திருப்பது) ஒப்பற்ற பெரும்பாவமேயாம்: (எ-று.) களிற்றுத்தானை தேர்த்தானை பரித்தானை வேற்றானை வாட்டானை விற்றானை என்ற அறுவகைச்சேனைகளும், இப்பாட்டின் முதலிரண்டடிகளிற் குறிக்கப்பட்டன. கால் அநேகம் - எட்டுத் திக்குகளினின்றும் விசும் பலவகைக்காற்றுகள்; இனி, சப்தமருத்துக்களுமாம். அவற்றின் பெயர் - ஆகவம், பிரவகம், சம்வகம், உத்வகம், விவகம், பரிவகம், பராவகம் என்பன: இவ்வெல்லாக்காற்றுக்களும் உகாந்தகாலத்தில் ஒருங்கு எழுந்து உலகையழிக்கும் நேமி- சக்கரம்; இது - சினையாகுபெயராய், தேரைக்குறித்தது, பட என்பதற்கு- அழியஎன்றும் உரைக்கலாம். பாலனே, ஏ - பிரிநிலை, பாவமே, ஏ - தேற்றம். (171) 34.-தருமனிடம் விடைபெற்றுக்கொண்டு வீமன் அபிமனுக்குத் துணையாகும் பொருட்டுச் செல்லுதல். எனக்குநீவிடைநல்குகென்றவனிருபதந்தொழுதியாரினுந் தனக்குநேர்தனையல்லதில்லெனவெல்லவல்லதொர்தண்டினான் மனக்குநேர்வருதேரினன்பலமண்டலீகருமன்னருஞ் சினக்குழாமுறுசேனையும்புடைசூழவன்றெதிர்செல்லவே. |
(இ-ள்.) 'எனக்கு-, நீ-, விடை நல்குக- (அபிமனுக்குத் துணைசென்று போர்செய்ய) அனுமதிகொடுப்பாயாக,' என்று- என்றுசொல்லி(த்தருமனைப் பிரார்த்தித்து), அவன் இரு பதம் தொழுது - அவனது உபயதிருவடியை வணங்கி, தனக்கு நேர்- தனக்குச் சமானம், தனை அல்லது - தன்னையேயன்றி, யாரின்உம் |