பக்கம் எண் :

118பாரதம்துரோண பருவம்

கனலெனவெகுண்டுசேனைபலபலகசரததுரங்கராசியுடன்வர
வனிலகுலமைந்தனானபதியொடுமபிமனொடும்வந்துபோரின்
                                       முடுகவே.

     (இ-ள்.) என - என்று, உயர் புயங்க கேது - உயர்ந்த
பாம்புக்கொடியையுடைய துரியோதனன், உரை செய - கட்டளைகூற, வீரர்
அனைவர்உம் - போர்வீர ரெல்லோரும், இவனை விடை கொண்டு -
இத்துரியோதனனிடம் அனுமதிபெற்று, காலம் முகில் என - கார்காலத்து
மேகம்போல, முரசுஇனம் முழங்க - வாத்திய  வகைகள் ஆரவாரிக்க, ஓடி-
விரைந்துசென்று, முனைபட அணிந்து- போர்களத்திலே பொருந்த ஒழுங்குபட
நின்று, கனல் என  வெகுண்டு - அக்கினிபோலக் கோபாவேசங்கொண்டு, சேனை
பல பல- மிகப்பலவாகிய சேனைகள், கச ரத  துரங்க ராசியுடன் வர-யானை தேர்
குதிரைகளின் கூட்டத்துடனே வர, அனில குலம் மைந்தன் ஆன பதியொடும்உம் -
வாயுவின் சிறந்த புத்திரனும் (வீரர்க்குத்) தலைவனுமான வீமனுடனும்,
அபிமனொடுஉம் - அபிமந்யுவுடனும், எதிர் எதிர் வந்து - எதிரிலே எதிரிலே
வந்து,போரில்முடுக- யுத்தத்தில் நெருங்க,-(எ - று.)-'வாயுமதலை வாளி
உதையினன்' எனஅடுத்த கவியோடு குளகமாய் முடியும்.

     உயர்தல் - சிறத்தலும், மேலிருத்தலும். காலமுகில்-யுகாந்த காலத்து
மேகமுமாம்; காளமேக மென்றலுமாம், முரசு-இங்கே, வாத்தியப்பொது.
'குலமைந்தன்'என்றதில், குலம் என்பது-சிறப்பு பொருளது.              (179)

42.- இதுவும், மேற்கவியும்-தன்னுடன் எதிர்த்தாரை வீமன்
அழித்தல் கூறும்.

விழிமலர்சிவந்துகோலமதிநுதல்வெயர்வரவிரண்டுதோளுமுறை
                                           முறை,
யழகுறவிளங்கமூர னிலவெழவணிமகர குண்டலாதிவெயிலெழ,
முழவினொடுசிங்கநாதமெழவெழமுடுகியெதிர்சென்று மோதி
                                         யவரவ,
ரெழில்வடிவ மெங்கும் வாளியுதையின னிரதமிசை நின்ற
                                   வாயுமதலையே.

     (இ-ள்.) இரதம்மிசை நின்ற வாயு மதலை-தேரின்மேல்நின்ற வீமன்,-விழி மலர்
சிவந்து-தாமரைமலர்போலுங் கண்கள் (கோபத்தாற்) செந்நிறம் பெற்று, கோலம் மதி
நுதல் - அழகிய சந்திரன் போன்ற நெற்றியில், வெயர் வர-(கோபாவேசத்தால்)
வேர்வை யுண்டாகவும், இரண்டு தோளும்-, முறைமுறை-மாறிமாறி(ப்புடைபருத்து)
(பூரித்து), அழகு உற விளங்க - அழகுமிக விளங்கவும், மூரல் - புன்சிரிப்பின்,
நிலவுஎழ - வெள்ளொளி வீசவும் அணி மகர குண்டல(ம்)ஆதி-அழகிய
மகரகுண்டலம்முதலிய ஆபரணங்களின், வெயில் -சூரியகாந்திபோன்ற சிவந்த ஒளி,
எழ-வெளித்தோன்றவும், முழுவினொடு-வாத்தியகோஷத்துடனே, சிங்க நாதம் -
சிங்ககர்ச்சனை போன்ற (தன்) கனைப்பொலியும், எழ எழ- மிகுதியாகத்
தோன்றவும்,முடுகி எதிர் சென்று-வேகமாக எதிரிற் போய், மோதி-தாக்கி, அவர்
அவர் எழில்வடிவம் எங்கும்உம்-அந்தந்தப் பகைவீரரது அழகிய உடம்பு
முழுவதிலும், வாளிஉதையினன்-அம்புகளைச் செலுத்தினான்; (எ - று.)